125x125 Ads

கடவுளின் மலம்

0 comments

 கடவுளின் மலம்




வட்டத் தொப்பி வடிவில்

சபிக்கப்பட்ட எச்சமாய்

பூமியில் விழுந்தது.

விழுந்த மலம்

உடனடியாக 

அரசின் கவனத்துக்கு

கொண்டு வரப்பட்டு

அரசுடைமையாக்கப்பட்டது

கடவுளின் மலம் பற்றி

அறிந்த மக்கள் அதனை

வணக்கத்துக்குரியதாக 

ஆக்கும்படி வேண்டினர்.

அரசு மறுத்து விட

எதிர்க்கட்சி 

அதனையே

தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டு

ஆட்சியைப் பிடித்தது.

சொன்ன வாக்குக்கமைய

கோயிலும் கட்டப்பட்டு

மலமும் பிரதி~;டை செய்யப்பட்டது.

கோயிலால் நகரம் பெருத்தாலும்

நகர மறுத்த நாற்றமாய்

மக்கள் மனமெங்கிலும் மலம்

                        (2003)

மலரன்னையின் காகிதப்படகு

0 comments

 மூன்று குறுநாவல்கள்

மொழித் திறனும் வடிவ நேர்த்தியும் கொண்டு கற்பனையை அறிதல் முறையாகப் பயன்படுத்தி வாழ்வு குறித்த முழுமையான தேடலை நிகழ்த்தும் ஒரு இலக்கிய வடிவமே நாவல் என்பர். வாழ்வு குறித்தான சுயமான தேடல் இன்றி பொழுது போக்குக்காக வாசகனை மகிழ்விப்பதற்காக எழுதப்படுகின்ற நாவல்களும் உண்டு. நாவல் என்பது வாழ்க்கைச் சித்தரிப்பையோ கருத்து ஒன்றையோ ஓர் உணர்வெழுச்சியையோ வெளிப்படுத்துவது அல்ல. ஒரு படைப்பாளி, தான் வாழும் சமூகத்தில் கண்ட, கேட்ட, அனுபவித்த இன்பமான அல்லது சோகமான முடிவுகளை வாழ்க்கையின் போக்கிலே கற்பனை கலந்து எதார்த்தமாக அமைத்துக் காட்டுவதே நாவலாகும். மலரன்னை மக்களின் சமூக வாழ்க்கையை வர்க்க வேறுபாடுகளை காதல் நிகழ்வுகளை உரையாடல் மொழிவழி நாவலுக்கூடாக தெளிவாக வெளிப்படுத்தியவர். இவருடைய காகிதப்படகு என்னும் தொகுப்பில் உயிர்துளி, காகிதப்படகு, காலத்திரை என மூன்று குறுநாவல்கள் இடம் பெறுகின்றன. இவருடைய நாவல்களில் கதை மாந்தர்கள் தனித்து இயங்காது சமூகத்தின் அங்கமாக இயங்குகின்றனர். இவர்கள் சமூகத்தின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் தன் பங்கினைச் செவ்வனே செய்கின்றனர். மலரன்னையின் இம்மூன்று நாவல்களும் சமூகம் கதை மாந்தரை எவ்வாறு அணுகுகிறது என்பதையும் எப்படி அவர்களின் வாழ்வில் பாதிப்பைச் செலுத்துகிறது என்பதையும்;; நேரடியாகச் சித்திரிக்கின்றது.

மலரன்னையின் உயிர்த்துளி நாவல் குழந்தை பேறின்மையால் வாழும் மாந்தரை சமூகம் எவ்வாறு நோக்கும் என்பதை பதிவு செய்கிறது. சமூகத்தில் எவ்வளவுதான் உயர்மட்டத்தில் ஒருவர் வாழ்ந்தாலும் அவருக்கு குழந்தையில்லை என்றால் அவரை சமூகம் மட்டுமல்ல உறவுகளும் ஒரு மனிதனாகவே பார்;க்காது என்பதையும் இந்நாவல் வெளிப்படுத்தி நிற்கிறது.  குழந்தைப் பேறில்லாதவர்களைச் சமூகம் புறக்கணிக்குமேயானால் அது சமூகத்தின் குற்றமே தவிர தனிமனிதன் குற்றமல்ல. அச்சமூகத்துக்கு முன்மாதிரியாக குழந்தைப் பேறில்லாதவர்களும் சமூகத்தில் உயர்வாக வாழலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒருநாவலை மலரன்னை படைத்திருந்தால் அவர் பாராட்டத்தக்கவர். ஒரு மனிதனுக்கு குழந்தை இல்லை என்றால் அதற்குத் தீர்வு குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பது ஒன்றுதான்; என்னும் கருத்தை மேலேழுந்தவாரியான இந்நாவல் முன்வைப்பதே இந்நாவலின் பெரும்பலவீனம்.குழந்தைப் பேறில்லாவிட்டாலும் ஒரு மனிதன் இயல்பாக தனக்குரிய சுயத்தோடு வாழலாம் என்பதை இந்நாவல் காட்டி இருக்குமேயானால் இந்நாவலை யதார்த்த நாவல் என்று கூட  கூறியிருக்கலாம். அதனையும் இந்நாவல் செய்யத் தவறிவிட்டது.

காகிதப்படகு நாவல் பெற்றாரின் சம்மதமின்றி காதலித்து திருமணம் செய்த பெண் யுத்த சூழலில் கணவனின் துணையின்றி நிராதரவான நிலையில் குழந்தையுடன் தனியொருத்தியாக நின்று எத்தகைய இன்னல்களை அனுபவிக்கிறாள் என்பதை எடுத்துரைக்கிறது. குடும்ப வறுமையும் சமூகத்தின் ஏளனப் பேச்சுகளும் ஒரு ஏழைப்பெண்ணின் வாழ்வை எவ்வாறு சிதைக்கிறது என்பதை விளக்கும் இந்நாவல் வாழ்க்கையின் ஓட்டம் என்பது நம்பிக்கையில் தான் நடக்கிறது என்பதையும் விளக்கி நிற்கிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் காரணமின்றி சிறையில் அடைக்கப்படுவதும் உறவினர்களுக்கு அவர்களின் கைது குறித்த விடயங்கள் அறிவிக்கப்படாத நிலையில் அவரைப் பிரிந்து குடும்ப அங்கத்தவர்கள் படும் வேதனையையும் தந்தையை இழந்தநிலையில் குழந்தை எதிர்நோக்கும் உளவியல் சிக்கல்களையும் இந்நாவல் வெளிப்படுத்தி நிற்கிறது. காண் உலகின் நிகழ்கால இருப்பை காட்சிப்படுத்தும் இந்நாவல் யதார்த்த வாழ்வின் அனுபவங்களாகச் சுவர்கிறது.

குடும்பத்தில் மனைவியின் இழப்பினால் கணவன் படும் துயரையும் அதேசமயம் மகளைப் பிரிந்த தந்தை படும் வலியையும் ஏக்கத்தையும் எடுத்துரைக்கும் நாவலே காலத்திரை. குடும்பத்தின் அச்சாணியும் ஆணிவேரும் மனைவிதான் என்பதை விளக்கி நிற்கும் இந்நாவல் சுயநலத்துக்காக மாமனாரை அனுசரித்து வாழும் சராசரி மருமகளையும் காட்சிப்படுத்துகிறது. அதேசமயம் பிறருக்கு பரோபகாரம் செய்து வாழும் வாழ்வது தான் உண்மையான வாழ்வு என்பதையும் இந்நாவல் கூறிநிற்கிறது. மகள் சிவகாமி தாயின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து ஒட்டும் உறவுமின்றி பதுளையில் வாழுகிறார். இச்சமயத்தில் சிவகாமியின் தாய் மங்களம் இறந்து விடுகிறார். எட்டுச் செலவு முடிய சிவராமனின் மகன் ஆருரன் தன்குடும்பத்தாருடன் வவுனியா சென்றுவிட இளைய மகன்  தன்குடும்பத்தாருடன் கொழும்பு சென்றுவிட மூத்த மகன் சரவணன் அவரோடு அவ்வீட்டிலேயே குடும்பத்தாருடன் தங்கி விடுகிறான். வீட்டின் வசதி கருதி சரவணனின் மனைவி நிர்மலாவும் சுயநலத்துடன் அவரை ஒருவாறு அனுசரித்து வாழச் சம்மதிக்கிறாள். கல்லூரியில் படிக்கும் அயல்வீட்டுச் சந்திரன் சிவராமன் வீட்டில் தங்கிப் படிப்பதுடன் அவருக்கும் உதவியாகவும் இருக்கிறான். கல்லூரியில் இருந்து யாழ் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சந்திரன் ராக்கிங் காலப்பகுதியில் தனக்கு அடுத்த வருடத்தில் படிக்கும் சிவகாமியின் மகள் தமிழரசியை காபாற்ற அந்த நட்பு இருவருக்கும் காதலாய் மாறுகிறது. இறுதியில் நோய்வாய்ப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்படும் சிவராமனை சந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க தன் பணிநேரத்தில் தமிழரசி கவனித்துக் கொள்கிறாள். தாத்தா, பேத்தி இருவருக்குமான நட்பு கடந்த கால விடயங்களை இரை மீட்க உதவுகிறது. ஈற்றில் மகளும் தந்தையும் ஒன்று சேர நாவல் நிறைவுக்கு வருகிறது.

வாழ்தலில் பெறும் ஒட்டு மொத்த அனுபவங்களின் விளைவே இம்மூன்று நாவல்கள். ஒவ்வொரு முறையும் படைப்பாளி பயணிக்கும் பாதை புதியதன்று. அது ஈழத்து நாவல்கள் தொடர்ந்து ஓடிய தடத்திலேயே பயணிக்கிறது. மலரன்னையின் சிறுகதைகள் மனித மனங்களின் வலியைப் பேசுகின்றன. ஆண், பெண் உறவுகளின் மனோநிலையில் ஏற்படும் மாற்றங்கள், சிக்கல்களைப் பதிவு செய்யும் மலரன்னையின் நாவல்கள் குடும்பச் சிதைவுகளையும் குற்றவுணர்வில் அலைக்களிக்கப்படும் இதயங்களையும் வாழ்வின் மீளாத துயரங்களையும் காவிவருகின்றன.



இச்சா

0 comments


ஜீலை – செப்ரெம்பர் 2020 கலைமுகம் இதழில் வெளிவந்த கட்டுரை சேனனின் சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் நாவல் வருவதற்கு முன் எழுதப்பட்ட கட்டுரை (29.12.2019 – நீள்கரைப் பயணத்தில் இச்சா குறித்து உரையாடியதன் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரை)
அந்தோனிதாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட ஷோபாசக்தி 1984இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். இயக்கம் தந்த கசப்பான அனுபவங்களால் 1986இல் இயக்கத்தில் இருந்து வெளியேறியவர். இதன் வெளிப்பாடே அவரது ‘கொரில்லா’. புலிகளின் விசுவாசமிக்க அந்தோனிதாசன் ரொக்கிராஜாக மாறி இயக்கத்துக்குள் அன்று நிலவிய குழப்பங்களையும் இயக்கம் பற்றி வெளியில் நிலவிய சூழலையும் இந்நாவலில் பதிவு செய்தார். 1990களில் இந்திய இராணுவமும்; விடுதலைப் புலிகளும் முட்டிக்கொண்ட சமயம் இலங்கை அரசு இவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. இதன் பிரதியீடே ‘ம்’ நாவல். பின்னர் அங்கிருந்த மீண்டு தாய்லாந்து சென்று பின் 1993இல் பிரான்ஸ் நாட்டில் அகதி அந்தஸ்துப் பெற்று இன்று பிரான்ஸ் நாட்டின் குடிமகனாக வாழ்ந்து வருகிறார். 2009 மே 18ஆம் நாள் நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்த சூழலில் அது கண்ட மானுட அவலங்களை அது காவி வந்த சொல்ல முடியாத கதைகளை உருத்திரிக்கப்பட்ட புனைவுகளை அவருடைய பொக்ஸ் கூறி நின்றது. அனுபவங்களில் இருந்து பெறப்படும் நுண்மையை இந்நாவல் கண்டடையவில்லை. புனைவின் வாயிலாக நாம் கண்டடையும் கற்பனையையும் செயற்கைத்தனத்தையும் இவரின் ‘இச்சா’ நாவலிலும் தரிசிக்கலாம்.
ஆழமனதில் உறைந்து போயிருக்கும் இயக்க அனுபவங்களை ஈழவர் கடந்து வந்த முட்பாதையை அதன் பேசப்படாத பக்கங்களை இந்நான்கு நாவல்களும் வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு விதமாகப் பேசின. துயரம், இழப்பு, மரணம், சித்திரவதைகள் என மனித அவலத்தின் அத்தனை பாடுகளின் உருக்காட்டியாக விளங்கும் ‘இச்சா’, புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான போர்நிறுத்த காலகட்டம் முடிவுற்று நாலாம் கட்ட இறுதிப் போர் தொடங்கும் காலத்தின் பிரதியாய்த் தன்னை முன்னிறுத்துகிறது. கறுப்பு பிரதிகள் வெளியீடாக வெளிவந்த இச்சா கடந்தகால வரலாற்றை தான் கேட்டறிந்த சுய அனுபவத்தை புனைவுதர்க்கத்தினூடாக மீளுருவாக்கம் செய்கிறது.
‘இச்சா’ பல்பொருண்மையில் கட்டுண்ட சமஸ்கிருதச் சொல். திரோதனா சக்தியாகிய இச்சா சக்திக்கும் நாவலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக வாயிலாகவே ‘இச்சா’ என்ற சொல் தனக்கு பரிச்சயமானது என்பார் ஷோபாசத்தி. இச்சா போசனம் என்பது தாய்ப்பால். நாவலின் இருபத்தோராம் பக்கத்தில் சிறிய பதுமன் ஆலாவின் மார்பில் பாலருந்துவதன் வாயிலாக ஜனிக்கும் இச்சாபேசனம் 287ஆம் பக்கம் வரை அன்பின் உருவமாய் தாய்மையின் சின்னமாய் உரிமையின் ஆகுதியாய் உணர்வின் அபின்னமாய் நிலைகொள்கிறது.
கிறிஸ்துவின் கடைசி இரவில் தொடங்கும் கதை பேராட்டங்களில் ஈடுபட்டு எரிந்த நகரத்தின் மேம்பாலங்களின் கீழும் பாதாள மெத்ரோ நிலையங்களிலும் நகரத்தின் ஒடுங்கிய குறுக்கு வீதிகளிலும் இருட்பொந்துகளிலும் பசியாலும் தாகத்தாலும் வருந்தி துன்புற்று வதைபட்ட நொடிந்த மனிதர்களை இயேசுவின் பிரகிருதியாய் காணமுயற்சிக்கிறது. இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நிலைகொள்ளும் நாவல் கதைசொல்லியின் அலைப்புண்ட மனநிலைக்கூடாக நாவலின் கருவை வரித்துக் கொள்கிறது. மூன்று தேவாலயங்களில் குண்டு வெடிப்பு நடந்து இலங்கையே ஸ்தம்பித்த நிலையில் நாவலின் கதைசொல்லி ‘பஸ்ஸ போர்டா’வில் தங்கி இருந்த சமயத்தில் அம்மாவையோ உறவினர்களையோ தொடர்புகொள்ள இயலாமல் அல்லலுறுகிறான். குண்டுவெடிப்பில் கொலையுண்டவர்கள் பற்றிய குறிப்புக்களை மடிக்கணனி வாயிலாக தேடும்போது அங்கு மர்லின் டேமி என்ற வெள்ளைக்காரப் பெண்ணின் புகைப்படத்தைப் பார்க்கிறான். கதைசொல்லிக்கு அறிமுகமான அந்த மர்லின் டேமிதான், ஆலா சிறையிலிருந்து ‘உரோவன்’ மொழியில் எழுதிய குறிப்புகளைக் கொடுத்தவள். அக்குறிப்புகளை அடியொற்றி எழுதப்பட்ட நாவலே இச்சா.
இச்சா நாவலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலைப் போராளியான ஆலாவின் வாழ்க்கை மூன்று பகுதிகளாக விவரிக்கப்படுகிறது. ஆலாவின் பிறப்பும் விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொள்வதும் முதலாம் பகுதியாக அமைய இரண்டாம் பகுதியில் ஆலாவின் சிறைவாழ்வு பேசப்படுகிறது. புலம்பெயர் தேசத்தில் அவள் அனுபவிக்கும் இன்னல்கள் மரணம் வரை தொடர்வதை மூன்றாம் பகுதி எடுத்துரைக்கிறது. ஆலா கிழக்கிலங்கையில் அமைந்திருக்கும் அம்பாறை மாவட்டத்திலுள்ள இலுப்பங்கேணியில் 08.01.1989 அன்று அடைமழைக்கால ஞாயிறு இரவில் பிறந்தாள். வெள்ளிப்பாவையாகிய ஆலா பாடசாலையில் கல்விகற்கும் சூழலில் இனவாதத்திற்குப் பலியானாள். ஆலாவுக்கு பாடசாலையில் தமிழ் படிக்க ஆசையிருந்தும் சிங்களமே படிக்கும் சூழலமைந்தது. பின்னர் சிங்களப்பேரினவாதத்தின் செல்லப்பிள்ளைகளான ஊர்க்காவல் படையினரின் வன்முறைக்கு ஆலா இலக்காகிறாள். அவ்வன்முறையே அவளைப் புலிப்போராளியாக மாற்றுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஆலா அங்கு தற்கொலைப் போராளியாக மாறுகிறாள். தன் இலக்கை நோக்கி நகரும் தருணத்தில் அவளது தற்கொலைத் தாக்குதல் தோல்வியில் முடிய அவள் கைது செய்யப்பட்டு 300 ஆண்டுக்கால தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.
கண்டிராஜ வீதியில் அமைந்துள்ள சிறையில் அடைக்கப்பட்ட ஆலா ஆறாத ரணங்களால் சொல்லவொன்னா துன்பத்தை அனுபவிக்கிறாள். தனிமையும் வெறுமையும் அழுத்த அதற்குள் அல்லாடும் ஆலா தன் நினைவுகளின் வழி கடந்த காலத்தை கடக்க முற்படுகிறாள். தன் வாழ்நாளில் கழித்த கணங்களை காகிதத்தில் எழுதி மனரணங்களை ஆற்ற முயல்கிறாள். அவள் அனுபவவழி நாவல் நகரும் பட்சத்தில் சிறையிலிருந்து அவளை மீட்கும் தேவதூதனாக புலம்பெயர்ந்த தமிழரான வாமதேவன் வருகிறார். சிறைமீட்ட அவளை அவரே திருமணமும் செய்துகொள்கிறார். லன்டோ ப்ளான்சே நகருக்கு அழைத்துச் சென்று அவளுடன் பெயருக்கு குடும்பமும் நடாத்துகிறார். ஒரு குழந்தைக்கு தாயாகும் ஆலா புலம்பெயர்ந்த நாட்டில் கணவனால் வஞ்சிக்கப்பட்டுகிறாள். பூமியின் பனித்துருவத்தின் விளிம்பில் பாதியும் பால்டிக் சமுத்திரத்துக்குள் பாதியுமாகக் கிடக்கின்ற லன்டோ ப்ளான்சே நகரொன்றில் அவள் மரணிக்கும்வரை, அவளது உள்ளுணர்வுகளையும் அதன் வெளிப்பாடாகத் தோன்றும் புறச் செயல்களையும்; கொண்டதே இச்சா நாவலின் இறுதிப்பகுதி. நிஜத்தில் சிறையிலிருந்து விடுதலை பெறாமலேயே ஆலா இறந்துபோகிறாள். போராளியின் மரணம் மகத்தானதாக அமையவேண்டுமென்ற மனநிலை கொண்ட கதைசொல்லி அவளை சிறையில் இருந்து மீட்டெடுத்து அவளுக்கு திருமணமும் செய்து வைத்து புலம்பெயர் நாட்டுக்கு அழைத்து வந்து அவளை ஒரு குழந்தைக்கு தாயுமாக்கி சாகடிக்கிறார்.
தாய்லாந்தில் நெற்றிக்கண் பத்திரிகை வாயிலாக அறியப்பட்ட அந்தோனிதாசன் பிரான்ஸ{ல் ‘நான்காம் அகிலம்’ என்ற சர்வதேச ட்ராட்ஸிகிய கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து செயற்பட்டவர். பின் அன்ரனிதாசன், சிவசக்தி என்ற புனை பெயரில் தமிழ்த்தேசியவாதியாக அறியப்பட்ட அந்தோனிதாசன் புலிஎதிர்ப்பு அரசியலுக்கூடாக ஷோபாசக்தியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். அம்மா இதழில் வெளிவந்த ‘எலிவேட்டை’ சிறுகதையே இவரை சோபாசக்தியாக அடையாளப்படுத்தியது. தேசத்துரோகி முதல் எம்.ஜி.ஆர் கொலை வழக்கு வரை புலி எதிர்பாளனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டஷோபாசக்தி அதனாலேயே இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர்வாழ் தமிழர்களிடமும் நன்கறியப்பட்டார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தமே அவரது புனைவுகளின் அடிநாதமாக அமைந்தன. எள்ளலும் இகழ்ச்சியும் கொண்ட அங்கத மொழிநடை கைவரப்பெற்றவராக அவர் இருந்தமையால் அவரது புனைவுகள் அதிகம் பேசப்பட்டன. யுத்தம் முடிவுக்கு வந்ததும் நுண்மையான உத்திகளின் வாயிலாக தம் படைப்புக்களைத் தக்கவைத்துக் கொண்டார். இதற்கு அவருக்கு தேர்ந்த வாசிப்பு கைகொடுத்துதவியது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வை அவர்களின் தேவையை நன்கறிந்த ஷோபாசக்தி அதற்கேற்ற மனோநிலையில் கற்பனை சார்ந்த தன்புனைவுகளை ஊகங்கள் வாயிலாக நடப்பியலுக்கு புறம்பாகப் படைக்கத் தொடங்கினார். fiction என்ற பெயரில் முன்னாள் போராளிகள் குறித்து இவர் எழுதிய ‘இச்சா’ மற்றும் ‘பொக்ஸ்’ ஆகிய இருநாவல்களின் உள்முக அரசியலை விளங்கிக்கொண்டவருக்கு ஷோபாசக்தியின் தந்திரோபாய மனஆற்றுகையை விளங்கிக்கொள்ள முடியும்.
கதையின் நோக்குநிலை நிரல்படுத்தப்பட்ட அத்தியாயங்கள் வாயிலாக அகக்குவியப்படுத்தலுக்கூடாக காட்சிப்படுத்தப்படுகிறது. தலைப்பை உள்வாங்கி எழுதப்பட்ட நாவலின் ஒவ்வொரு பகுதிகளும் கதைப்போக்கு ஏற்றவகையில் சின்னச்சின்ன அத்தியாயங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. சில அத்தியாயங்கள் ஒரு தலைப்பின் கீழ் தம்மை முடித்துக் கொள்கின்றன. நாவலின் நேர்த்திக்கு தேர்ந்த அத்தியாய வைப்புமுறையும் உதவுகின்றது.
நாவலில் கையாளப்பட்ட பிறிதொரு உத்தி கற்பனை மொழியான ‘உரோவன்’ மொழியில் ‘ஆலா’ எழுதியிருக்கும் குறிப்புகளின் வழி கதைசொல்லுதல். இந்தக் கதையை முழுவதும் அறிவதற்கு ‘உரோவன்’ மொழி அவசியம் எனக்கூறிய ஷோபாசக்தி இம்மொழியை உரலிக்’ மொழிக்குடும்பத்தின் கிளைமொழியான தெற்குப் ஃபின்னிக் மொழியைச் சார்ந்தது எனக் கூறுகிறார். உரோவன் மொழியில் 29லிபிகள் உள்ளன. இவற்றில் 26லிபிகள் ஆங்கில மொழியிலுள்ள அதே வடிவத்தைக் கொண்டிருப்பினும் உச்சரிப்புக்களில் வேறுபாடு கொண்டவை எனவும் கூறுவார். 15 தொடக்கம் 16 வரையுள்ள பக்கங்கள் உரோவன் மொழி குறித்துப் பேசினாலும் அம்மொழிப் பிரயோகம் நாவலில் பெருமளவு கையாளப்படவில்லை. 15ஆம்16ஆம் பக்கங்களின்றியே நாவலை சாதரண வாசகனால் விளங்கிக்கொள்ள முடியும். கையாளப்பட்ட புதிய உத்தி என்ற வகையில் தோற்றம் பெறும் உரோவன் மொழி நாவலில் எத்தகைய செல்வாக்கையும் செலுத்தவில்லை. உரோவன் மொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெறும் பல சொற்கள் v.c.கந்தையாவின் மட்டக்களப்பு தமிழகம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. ளுipநடயள என்பதற்கு சித்திரம்;பூச்சி எனக் கூறுவார். சித்திரப்பூச்சி என்பதற்கு சிற்றெறும்பு என்பது பொருள் (மட்டக்களப்பு தமிழகம் பக்- 97). kood என்பதற்கு அசப்பியம் என விளக்கமளிக்கப்பட்டது. உண்மையில் அச்சொல் அதப்பியம் என்ற சொல்லின் திரிந்த வடிவம். அதப்பியம் என்றால் மறைத்துச் சொல்ல வேண்டிய சொல். ஒல்லாந்தர் வரவால் தமிழுக்கு கிடைத்த அறுத்தப்பால்கிழங்கு என்னும் சொல் உருளைக்கிழங்கை குறிக்கும். கட்டிறம்பூச்சி என்பது கட்டெறும்பையும் சரிசாமம் என்பது நடுஇரவையும் ஒசில் என்பது அழகு, அழகின்மை என இரு பொருண்மையிலும் கட்டுறும் சொற்களாகும்.
இலுப்பங்கேணி கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு ‘பதுமர் குடி’ என்ற பகுதியை உயிரோட்டமாகக் காட்சிப்படுத்தவும் ஷோபாசக்திக்கு மட்டக்களப்பு தமிழகம் என்ற நூலே உதவுகிறது. யதார்த்தம் கடந்த விந்தையான சம்பவங்களைக் கொண்டு புனையப்பட்ட இப்பகுதி கல்லோயக் கிராமத்தின் ஆதித் தமிழ் குடிகளின் வாழ்வியலை உரைக்கும் பகுதி. கல்லோயாக் கிராமம் இலங்கை வரைபடத்தின் வெறும் புள்ளியாய் தெரிந்து மறைந்து போகும் இடம் மட்டுமல்ல. கலாசாரத்தின் சாரம்…அதனைத் தாங்கி நிற்கும் ஆத்மா என மனிதனின் உணர்வும் இயற்கையும் ஒன்றர கலந்து பின்னிப் பிணைந்து வாழுமிடம். வரலாறு, கலாசாரம். மரபின் நீட்சியென மையங்கொள்ளும் பதுமர் குடியை உணர்வும் உயிரும் சங்கமிக்கும் இடமாக காட்சிப்படுத்துவதற்கு மட்டக்களப்பு தமிழகத்தில் இடம்பெறும் ‘பாம்புக்கடி’ என்ற அத்தியாயம் உதவுகிறது.
“நாகசாதிப்பாம்புகளை மட்டும் எட்டுவகைகளாகப் பிரித்துள்ளார்கள். அவ்வெட்டு வகையும் நான்கு குலப்பகுப்புக்குள் அடங்குவ. முதலாவதான பிராமண சாதியில் அநந்தன் குளிகன் என்னும் இருவகை நாகமும் இரண்டாவதான அரசசாதியில் வாசுகி, சங்குபாலகன் என்னும் இரண்டும் மூன்றாவதான செட்டிநாகத்தில் தக்கனும் மாபதுமனும் நான்காவதான சூத்திரசாதி நாகத்தில் பதுமனும் கார்கோடனும் சேர்வனவாகும்”
(மட்டக்களப்பு தமிழகம் -361)
கல்லோயா அணைக்கட்டு கட்டப்பட்டதை தொடர்ந்த கல்லோயாப் பள்ளத்தாக்கில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களால் பள்ளத்தாக்கில் பரவணித் தமிழ் குடிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உயிர் ஆக்கினைகள் நிகழ்த்தப்பட்ட சமயத்தில் மக்கள் காடுகளுக்குள் பதுங்கிக் கொண்ட சமயத்தில் நான்கு சாதி நாகங்களும் கிராமத்தை காத்தன எனக் கூறி ஷோபாசக்தி மேற்குறிப்பிட்ட பாம்புகளின் பெயர்களை எடுத்தாள்வார். (இச்சா.பக்.45) நாவலில் நாகங்களின் சங்கு, சக்கரம், வில், புள்ளடி குறியிட்ட படங்கள் என விரியும் பகுதிகள் அனைத்தும் மட்டக்களப்பு தமிழகத்தை ஆதாரமாகக் கொண்டே எழுதப்பட்டது. பதுமர் குடியில் இடம்பெறும் எட்டாம் அத்தியாயம் மந்திரங்கள் பற்றி உரைக்கிறது. மூதேவி அழைப்பு, உடற்கட்டு மந்திரம், உறுக்குமந்திரம். கவசநெட்டை, ஏவல்மந்திரம் பற்றி ஷோபாசக்தியால் குறிப்பிடும் பகுதிகள் மட்டக்களப்பு தமிழகத்தில் அமைந்துள்ள ‘மருந்தும் மந்திரமும்’ என்ற பகுதியில் அமைந்துள்ளவை. மட்டக்களப்பு தமிழகம் வாயிலாகப் பயணிக்கும் இப்பகுதி தமிழரின் ஆதிக்குடியிருப்பு, கலாசாரம் என விரிந்தாலும் அதில் ஊடாடும் மனித மனத்தின் கூட்டுச் சேர்க்கையையோ உயிர்பான பாத்திரங்களின் இயல்புசார் வாழ்க்கைமுறையையோ நாவல் எடுத்துக் காட்டவில்லை.
மடுவல் சீமையில் உற்பத்தியாகும் கல்லோயா ஆற்றின் வடகரையில் இங்கினியகலாவுக்கும் வங்கக் கடலுக்கும் சரி நடுவாக உள்ள இலுப்பங்கேணியைக் களமாகக் கொண்டு நாவல் படைக்கப்பட்டுள்ளது. இலுப்பங்கேணிக்கு ஆறுகிலோமீற்றர் தூரத்திலுள்ள அம்பாறை மாவட்டம். அங்கிருந்து பதினைந்து கிலோமீற்றர் தூரத்திலுள்ள வீரமுனையும் நாவலில் ஒரு பந்தியில் எடுத்துக்காட்டப்படுகிறது. கிழக்கிலங்கையில் அதிகளவு வன்முறைகளைச் சந்தித்த இடங்களில் ஒன்று வீரமுனை. வீரமுனையிலுள்ள சிந்தாயாத்திரை பிள்ளையார் கோயிலில் வைத்து ஊர்காவற்துறையினரால் 400 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறி அதனை விரைவாகக் கடந்துவிடுகின்றார். இப்பந்தி விரித்து எழுதப்படவேண்டிய பந்தி. சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல் காரணமாக வீரமுனையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களும் அச்சுறுத்தப்பட்டன. குறிப்பாக வளத்தாப்பிட்டிய வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, கொண்டைவெட்டுவான், சொறிக்கல்முனை, அம்பாறை முதலான பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையில் இக்கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஷ்ண மிசன் பாடசாலை வளவினுள் 1990 யூன் மாதம் முதல் யூலை மாதம் வரை தஞ்சம் புகுந்த நிலையில் ஆகஸ்ட் 12ஆம் நாள் இத்துயரச் சம்பவம் நடைபெற்றது. கொண்டை வெட்டுவானில் ஆனி 29ஆம் திகதி நெருப்பு மூட்டப்பட்டு ஐம்பத்திஆறு பேர் கொளுத்தப்பட்ட சம்பவமும் நினைவு கூரத்தக்கது.
06.08.1990ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள திராய்க்கேணிக் கிராமத்து மக்களின் உடைமைகளை இராணுவத்தினரின் துணையோடு சூறையாடிய தமிழின விரோதசக்திகள் அங்கிருந்த பத்து பேரைக் கொன்று ஒழித்ததோடு நில்லாது அப்பாவித் தமிழ் மக்கள் முப்பத்தாறு பேரை பெரியதம்பிரான் ஆலயத்தில் வைத்தும் கொன்று குவித்தனர். இச்சம்பவத்தில் மொத்தம் 46பேர் கொல்லப்பட்டனர். வடக்கே ஒலிவிலுக்கும் தெற்கே பாலமுனைக்கும் இடையில் 360குடும்பங்களுடன் இருந்த பழம் பெரும் கிராமமான அக்கிராமம் முழுமையாக அழிக்கப்பட்டு இன்று இல்லாமலே போய்விட்டது (அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள் -ஜெயானந்தமூர்த்தி-பக்.48-61). 1985ஆம் ஆண்டுக்கு முன் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்த மீனோடைக்கட்டு கிராமமும் முஸ்லிங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இன்று தமிழர்கள் இல்லா முஸ்லிம் கிராமமாகக் காணப்படுகின்றது.
நாவலில் இடம்பெறும் ‘இச்சா’ என்ற பகுதி ஆலாப்பறவை பற்றி எடுத்துரைக்கிறது. “ஆலா, பறவையினங்களிலேயே அதிக தூரம் பறக்கும் வல்லமையுடையது. பூமியின் ஒரு துருவத்தில் இருந்து எதிர்த்துருவம் வரை பறக்கக் கூடியது” என விக்கிபீடியாவில் உரைக்கப்பட்டதை அப்படியே ஷோபாசக்தி வழிமொழிகிறார். ஆனால் வெள்ளைநிற மார்பைக் கொண்ட ஆலாப்பறவையை கடற்கழுகு என தமிழ் லெக்சிகன் கூறுகிறது. வின்சிலோ அகராதியும் ‘கடற்கழுகு’ என்றே கூறுகிறது. இப்பறவைக்கு நீண்ட தூரம் பறக்கும் ஆற்றல் கிடையாது என ஆலாப்பறவையை அறிந்தவர்கள் இன்றும் இலங்கையில் உரைப்பர். லண்டனில் நடந்த இச்சா அறிமுகவிழாவில் மேற்குறிப்பிட்ட இரு அகராதிகளையும் சுட்டிக்காட்டி நித்தியானந்தன் இதனைத் தெளிவுபடுத்தி இருந்தார். ஆனால் ஷோபாசக்தி இதனை மறுத்து பிரான்சில் ஆலாப்பறவையை ‘ஸ்தேர்ன்’ எனக் கூறுவர் எனக்கூறி இப்பறவை வடதுருவத்தில் இருந்து தென்துருவம் பறக்கக்கூடியது என உரைப்பர். கடல்வாழ் பறவையாகக் கருதப்படும் ஸ்தேர்ன் மீன்களைப் பிடித்துண்ணும் பறவை. இப்பறவை மூன்றரை அடி நீளமுடையது இதனுடைய இறகுகள் ஏழு அடிவரையும் காணப்படும் எனக்கூறுவர்.
வேட்டையின் மேல் மோகமும் வீரமும் கொண்ட ஆலாப்பறவையின் நிழல்வடிவமே உயிரும் உணர்வும் வேட்கையும் கொண்ட கப்டன் ஆலா. ஆலாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு படைக்கப்பட்ட ‘இச்சா’ தேசத்தின் விடியலுக்காய் மூடிண்ட சிறைக்குள் உருச் சிதைக்கப்பட்டு நம்பிக்கையற்று எதிர்காலமின்றி வாழ்ந்து மடிந்த – மடியும் அப்பாவி போராளிகளின் நிஜவுருக்களை தன்னளவில் புனைவாகப் பதிவு செய்கிறது. பதின்ம வயதுக்கான துடிப்பும் திட்பமும் மூர்க்கமும் கொண்ட ஆலாப் பாத்திரம் கடவுளால் சபிக்கப்பட்ட ஆத்மா. இனப் படுகொலையும் யுத்தமும் நிகழ் இலக்கியமான ஈழச்சூழலில் துயரம், இழப்பு, மரணம், சித்திரவதைகள், இனம், அடையாளம், மொழிவாதம், பாலியல் என விரியும் சோபாசக்தியின் இந்நாவல் சிறையில் நீத்துப் போன பெண்ணுக்கு மாட்சிமிக்க மரணத்தை அளிக்கிறது. துயர்காவியாகவும் துயருறுவதற்காகவும் படைக்கப்பட்ட ஆலாப் பாத்திரத்துக்கு நிஜவடிவை அளிக்க விரும்பிய ஷோபாசக்தி பின்னட்டையில் அலங்கரிக்கப்பட்ட பெண் ஒன்றின் புகைப்படத்தை இட்டு புனைவுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறார். இத்தருணத்தில் சுந்தர ராமசாமி, ‘புகைப்படம்’ குறித்து எங்கள் இளங் கவிஞருக்கு அங்கதமாகக் கூறிய வார்த்தைகள் என்னையும் அறியாமல் நினைவுக்கு வருகிறது.
“புகைப்படம் முக்கியமென்றால் அதற்கு ஈடான முக்கியத்துவம் கொண்டது
அடியில் இடப்பட்டிருக்கும் வரிகள். அவை எண்ணிக்கையில் அதிகம் இல்லை.
ஒவ்வொரு வரியும் ஒரு பிரபஞ்சத்தை முழுங்கிக் கொண்டிருக்கும் போது எதற்கு
சொற்களை வீணாக்க வேண்டும். அந்த வரிகள் நமக்கு புரியாமல் இருக்கலாம்.
ஆனால் அவை நம் மனத்தை கவருகின்றன. தெளிவான தமிழ் எழுதுவதை
நினைத்து வெட்கப்படுகிறோம்”. (சண்டே எக்ஸ்பிரஸ் 06.04.2003)
நாவலில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல கதைப்பின்னலும் பாத்திரவார்ப்பும் அமைந்திருக்க வேண்டும். வாழ்க்கை விளக்கத்தை நோக்கிச் செல்லும் நாவல்களில் கதைப்பின்னல் முனை தாழ்ந்தும் பாத்திரவார்ப்பு உயர்ந்தும் காணப்படும். நாவல் சம்பவங்களின் கோவையாக இல்லாமல் வாழ்க்கையை அளிக்கின்ற பாத்திரங்களுக்கூடாக காரண காரிய தொடர்புகளுடன் விபரிக்கப்படும் போது நாவல் முழுமை பெறும். நாவலில் ஆலாப்பாத்திரத்தின் தனித்தன்மையைப் பேணவும் அதனை தலை சிறந்த பாத்திரமாக உருவகிக்கவும் ஷோபாசக்தியால் உருவாக்கப்பட்ட பாத்திரமே வாமதேவன். ஆலாவுக்கு உயிர் கொடுப்பதற்காக எதிர்நிலைத் தன்மைகளோடு படைக்கப்பட்ட தட்டையான இப்பாத்திரம் மிகப்பலவீனமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிறையில் ஆலாவின் விடுதலைக்கு உறுதுணையாக நின்று அவளைக் கரம்பிடிக்கும் வாமன் திருமணம் முடித்த கையோடு அவளை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கின்றான். அவ்வாறு அழைத்துச் செல்லும் வழியில் இணைப்பு விமானத்துக்காக பன்னிரண்டு மணி நேரம் இருவரும் காத்து நிற்கும் போது விடுதியில் மிருகத்தனமாக தனது இச்சையை தணித்துக் கொள்கிறான் வாமன். அதன்பின் அவளை ஒதுக்கிவிடுகிறான்; பெண் புலியொன்றிடம் தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக வாமன் திருமணம் செய்து கொண்டாரா? அல்லது போராளி ஒருவருக்கு வாழ்வளித்து சமூக அந்தஸ்தை உயர்த்த திருமணம் செய்து கொண்டாரா என்னும் கேள்விக்களுக்கான விடைகளும் உணர்வுபூர்வமாக நாவலில் கூறப்படவில்லை. ஒரு பெண்ணிடம் அதிகாரத்தை மட்டுமே பலாத்காரமாகச் செலுத்த வாமதேவனுக்கு அடிப்படையாக இருந்த பின்னணி என்ன? ஒரு போராளிக்கு மறுவாழ்வளித்த வாமதேவன் அதனைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள ஏன் முனையவில்லை என்ற பலகேள்விகளுக்கு விடையின்றியே நாவல் நகர்த்தப்படுகிறது. கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான பிரச்சினைகள், வேற்றுமைகளின் பிற்புலங்களைக் கூட இந்நாவல் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஆலாவை ஆலாபணம் செய்வதில் காட்டிய அக்கறையும் கரிசனையும் ஏனைய பாத்திர உருவாக்கத்தில் கைக்கொள்ளவில்லை. ஆலாவிடம் சிறிதும் அக்கறையற்ற வாமதேவன் ஆலாவின் குழந்தை மேல் ஆர்வம் கொள்ள காரணமான உளவியற் பின்னணிகளையும் நாவல் வெளிப்படுத்த தவறிவிட்டது. விடுதலைப் போராட்டம் மறுவடிவம் எடுத்துள்ள புலம்பெயர்ந்த தேசத்தில் போராளிகளுக்கு உதவுதல், மறுவாழ்வளித்தல், தேசத்தை மீளக்கட்டுதல் போன்ற விடயங்கள் கூரிய கவனத்தை பெற்றுள்ள நிலையில் அது தரும் சமூக அங்கிகாரம் தனித்துவமானது. இதனைக் கொச்சப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட வாமதேவன் பாத்திரம் தேவைக்கேற்ற வகையில் தொட்டுக்கொள்ள ஊறுகாயாகப் பயன்படுகிறது. வெளிநாட்டில் வாழும் ஊடகம் நடாத்துபவர்களைச் சாடுவதற்காக உருவாக்கப்பட்ட இப்பாத்திரம் தன் பணியைச் செவ்வனே செய்தது. கருத்துநிலைக்கேற்ப உயிர்த்துடிப்பற்று செயற்கைத் தனமாக உருவாக்கப்பட்ட இப்பாத்திரம் மனதில் ஒட்டாத பாத்திரமாக சோபையிழந்து போகிறது.
ஷோபாசக்தி என்னும் தனிமனிதனின் சிந்தனை, நினைவு, செயலூக்கம் யாவற்றிலும் பாலியலே விஞ்சிநிற்பதால் இவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் பாலியல் வலிந்து திணிக்கப்படுகிறது. கதைசொல்லியின் மடியில் நண்பனின் மகள் அமர்ந்த போது சுயஇன்பம் காணும் ஒருவனின் மனப்பிறழ்வைக் கூறும் காயா கதையை எழுதிய ஷோபாசக்தி போர்னோகிராபியில் நடிக்கும் “ஜாஸ்மின்” என்ற கதாநாயகியை பின்னணியாகக் கொண்டு ரம்ழான் கதையையும் எழுதினார். இதே ஷோபாசக்திதான் தொழிற்சாலைப் பரிசோதனைக்கு பயந்து உள்ளாடை அணியாத தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு ‘எழுச்சி’ கதையை எழுதினார். இதன் தொடர்ச்சியை ‘பொக்ஸ்’, ‘இச்சா’ நாவலிலும் காணலாம். பெண்ணுடல் ஆணின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஷோபாசக்தியின் புனைவுகளில் விரசமே விஞ்சிநிற்கிறது. பெண் போராளிகளிடம் உடலிச்சையை தீர்த்தல் என்ற தார்மீக மந்திரம் பொக்ஸில் வெளிப்பட்டதைப்போல ஷோபாசக்தி இச்சாவிலும் புலப்படுத்தப்படுகிறது. ஆணின் பாலியல் இச்சைக்குள்ளாகும் போகவுடலாக பெண்ணிருப்பதையும் பெண்ணுடல் அழகியலாக மடைமாற்றமடைவதையும் ஷோபாசக்தியின் புனைவுகளில் காணலாம். இவருடைய இச்சா நாவலிலும் அப்பாச்சி கிழவனால் ஆலா சிறுவயதில் பாலியல் நெருக்கடிக்குள் உள்ளாவதை அருவருக்கத் தக்க வகையில் வரிவரியாக சித்திரிப்பது நாவலின் இயல்வோட்டத்தைச் சிதைக்கிறது. ஆடவனுக்கு எப்போதுமே பெண் பாலியல் நுகர்வுப்பொருள் என்பதை வாமதேவன் ஆலாவிடம் மூன்று தரம் தன்னுடலிச்சையை தீர்த்துக் கொண்டதன் வாயிலாகவும் வெளிப்படுத்துகிறார். காமம் துய்க்கப்பட்ட பின் ‘தோழி’ எவ்வாறு ‘கோழி’யாக (இச்சா.பக்.247) மாறிப்போனாள். இந்த நடத்தை மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது வாமதேவனின் உள்நோக்கம் தான் என்ன? என்ற கேள்விக்கு ‘இச்சா’வில் விடையில்லை.
தமிழ், சிங்களத் தொன்மங்கள், பழமொழிகள், நாட்டார் பாடல்கள் நாவலை அழுத்தமுள்ள புனைவாக உருமாற்றுகிறது. நாவலில் அனுபவ உண்மைகள் இயற்கையோடு இணைந்து வரவேண்டும். தன்போக்கில் கூடி வரும் அனுபவங்களின் கூட்டுக் கலவையாய் நாவல் உருப்பெறும் போது நாவல் வாசகனைச் சென்று அடைகிறது. இச்சா நாவலில் இடம்பெறும் கண்டிராஜன் கூத்து விபரணப்பதிவாய் இடம்பெற்றாலும் நாவலில் ஆன்மாவின் பதிவாய் ஒலிக்கிறது. கண்டி அரசனுக்கெதிராக கலகம் செய்த எகெலபொலவின் வளவான சிறைக்கூடத்தில் இருக்கும் ஆலாவின் எண்ணப் பதிவாய் கண்டிராஜன் கூத்தில் இடம்பெறும் சம்பவங்கள் நினைவுகூரப்படுகிறது. ஆலாவின் தந்தை ஒரு கூத்துக்கலைஞர். அவர் கூத்தில் எடுத்து நடிக்கும் பாத்திரம் கண்டிராஜனை எதிர்த்து கழகம் செய்யும் மந்திரியினுடைய மனைவி பாத்திரம். கலகம் அடக்கப்பட அரசபையில் மந்திரி குடும்பம் நிராதரவாய் தண்டனைக்கு நிறுத்தப்படுகிறது. மந்திரி மனைவி முன்னாலேயே மந்திரியின் இரண்டு ஆண்குழந்தைகளும் தலைவெட்டிக் கொல்லப்படுகிறார்கள். கண்டியரசனோ பிறந்து பத்து நாட்களேயான பச்சிளங் குழந்தையைக் கொல்ல வேறு ஒரு உபாயம் செய்கிறான். நெல் குத்தும் உரலில் போட்டு உலக்கையில் இடித்து கொள்வதே அது. அழுதுகொண்டே மந்திரி மனைவி குமாரிஹாமி அதைச் செய்கிறாள். காட்டுக் கொடிகளால் கைகளும் கால்களும் பிணைக்கப்பட்டு மந்திரிகுமாரி சாமலிதேவி திக்கிரிமெனிக்கே கண்டி ஏரியில் மூழ்கடித்துக் கொல்லப்படுகிறாள். வலியும் வாதையும் இரத்தமும் மரணமும் மனிதனுக்கு பரவசமூட்டுகின்றன. திருவிழாக்களில் தினம் தினம் ஆடப்படுவதற்கும் போர்கால இலக்கியங்கள் அதிகளவில் விற்பனையாவதற்கும் இதுவே காரணம்.
ஷோபாசக்தியின் எழுத்துகளில் காணப்படும் அங்கதத்தையும் உத்திக்கூடாக கதைசொல்லும் முறைமையையும் இச்சா நாவலில் காணமுடியாது. மரபான கதைசொல்லல் முறைக்கூடாகவே நாவல் தன்னை நகர்த்திக் கொள்கிறது. சுல்தான் பப்பா மீது ஆலா கொள்ளும் ஒருதலைக்காதல்; கூடிய சில்லறைத்தனமாக இலக்கியரசனையற்று காட்டப்படுகிறது. தேர்ந்த வாசகனால் அதில் ஒட்டமுடியாது. ஆலா காதலுணர்வு மேலிட சுல்தான் பப்பாவின் மேசையில் ஒவ்வொரு நாளும் வெள்ளை அட்டையில் கவிதை வரிகளை எழுதி வைப்பதும் அவரின் நினைப்பில் தன்னை மறந்து இருப்பதும் தமிழ் சினிமாப் பாணியில் காட்டப்படுகிறது. ஷோபாசக்தி என்ற கதைசொல்லி ஜனரஞ்சக படைப்பாளியாக தோற்றுப் போகிறார். ஷோபாசக்தியின் இச்சா நாவலை ஓகோ என்று உரைப்பவருக்கு இது சமர்ப்பணம். சுல்தான் பப்பாவை கே.பி. எனப்படும் பத்மநாதனாக சித்திரிக்க முனையும் இறுதி அத்தியாயமும் நம்பும்படியாக இல்லை.
“ஆலா” எனும் வெள்ளிப்பாவையின் அகநிலைப்படிமங்களின் மொத்த அடையாளமே இச்சா. கடந்தகால வரலாற்றின் தொடர்ச்சியை தான் அறிந்த, வாசித்த, தரிசித்த களங்கள், நூல்களின் வழி மீள்நிலைப்படுத்த முயல்கிறார். கூர்ந்த மதியோடு தேர்ந்த நோக்கோடும் அறத்தின் வழி உரைக்கப்பட வேண்டிய வரலாற்றை பொறுப்பற்று சாகஸம் நிறைந்த புனைவின் வழி சித்திரிக்க முயன்றதன் விளைவே இச்சா. பயத்தோடும் கண்ணீரோடும் துயரத்தோடும் கடந்து போன கசப்பான வரலாற்றை மீளவலியுறுத்துவதாக அமையும் இந்நாவல் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக சிங்கள, முஸ்லிம் மக்கள் கொண்டுள்ள நோக்குநிலை என்ன என்பதையும் யுத்தம் முடிவுற்ற நிலையில் விளிம்புநிலை மனிதர்கள் குறித்த புரிதல் என்ன என்பதையும் இந்நாவல் வெளிப்படுத்த தவறிவிட்டது. அம்பாறையை களமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலில் கிழக்கு மாகாணப் பேச்சுவழக்கை பாத்திரங்கள் கொண்டிருக்கவில்லை. சொற்களை இழுத்துப் பேசும் ஒரு வட்டார வழக்கு அம்பாறை மாவட்டப் பேச்சுவழக்கில் காணப்படும். விமல்குழந்தைவேலின் நாவல்களில் இம்மொழியின் உயிரோட்டத்தை தரிசிக்கலாம். சிற்சில இடங்களில் நாவலில் ஆண்மொழி வெளிப்படவே செய்கிறது என்று விமர்சகர்கள் கூறினாலும் அக்கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. மொழியில் ஆண் - பெண் என்ற பேதமில்லை என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். தமிழ் மக்களின் கிராமிய வாழ்வு அவர்களின் கலை, பண்பாட்டு அம்சங்கள் நாவலில் வெளிப்படும் அளவுக்கு சிங்கள – முஸ்லிம் மக்களின் வாழ்வும் அதன் ஊடாட்டமும் மருந்துக்கேனும் வெளிப்படவில்லை. வெள்ளையர்களால் அடிமையாகப் பிடித்துச் செல்லப்பட்டு வாழ்விழந்து நிர்கதியாகிப்போன (வேர்கள் நாவலில் வரும்) குன்ரா கின்ரேயின் பாத்திரத்தை விமர்சகர்கள் ஆலாப்பாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள். குண்டா கிண்டேவின் வம்சத்தில் பிறந்த குன்ரா கின்ரோ தாய்நாட்டுப்பற்றும் குடிப்பெருமையும் கொண்டு உயிரும் உணர்வுமாக அலெக்ஸ் ஹேலியால் படைக்கப்பட்ட பாத்திரம். புனைவுக்கும் உண்மைக்கும் இடையில் செயற்கைத்தனமாக ஷோபாசக்தியால் உருவாக்கப்பட்ட பாத்திரம் ஆலா. குண்டா கிண்டே மகளுக்கு கதை கூறும் தருணங்கள் - தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவுமுறை தந்தை மகள் குறித்தேங்கும் கணங்கள் வேர்கள் நாவலில் உயிரோட்டமாக அலெக்ஸ் ஹேலியால் பதிவுசெய்யப்படுகின்றன. அலெக்ஸ் ஹேலியின் எழுத்து வாசிப்பின் எல்லைகளைக் கடந்து இயல்பாய் பரிசிக்கும் ஆன்மாவின் எழுத்து. ஆன்ம தரிசனத்தை உணர்வுகளின் பரிபாஷைகளை ஷோபாசக்தியின் புனைவுகளில் காணமுடியாது. எள்ளலும் கிண்டலும் கேலியும் நிறைந்த மொழிநடையில் பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் கதை சொல்லும் போக்கே ஷோபாசக்தியிடம் காணப்படுவது. உயிரும் உணர்வும் கொண்டு அனுபவத்தின் வழி அலெக்ஸ் ஹேலியால் படைக்கப்பட்ட உண்மைப் பாத்திரமான குன்ரா கின்ரோவை ஆலாப் பாத்திரத்துடன் ஒப்பிடமுடியாது. கொடுமை, துன்பம் என்பவற்றில் கூட ஆலாவுக்கும் குன்ரா கின்ரோவுக்கும் இடையில் நிறைய வேற்றுமைகள் உண்டு. பொதுப் புத்தியற்று கொசுறு தத்துவங்களை உள்வாங்கி எழுதப்பட்ட ஷோபாசக்தியின் சராசரி நாவலை விமர்சகர்கள் முதற்தரமான நாவலாக சித்திரிக்க முனைவதின் உள்ளார்ந்த அரசியல் நோக்கம்தான் என்ன? என்பது என் சிற்றறிவுக்கு புலப்படவில்லை.

ஈழத்துக் கவிதைகளில் பொதுவுடமைக்கருத்துக்கள்

0 comments

சோவியத், சீனப்புரட்சிக்குப்பின்னர் ஈழத்துக்கவிதைகளில் மார்க்சியக் கொள்கையின் தாக்கம் அதிகம் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. சமுதாயப் புரட்சியை அடுத்து மக்களைச் செலுத்தக்கூடிய பொதுவுடமை பற்றிய முற்போக்குத்தன்மையை மார்க்சீயக்கொள்கை, ஈழத்துத் தமிழ்க்கவிதையில் விதைத்துள்ளது. இலக்கியம் சமுதாயத்தின் பிரதிபலிப்பு என்னும் பிரதிபலிப்புக்கோட்பாடு மார்க்சிய அழகியலில் முதன்மையானது. அவ்வகையில் ஈழத்தில் மார்க்சியம் புறவயமான சமுதாய வாழ்வியலை - சமூக இருப்பை இயக்கவியல், அரசியல், வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் அழகியல் கண்கொண்டு நவீன கவிதைக்கூடாக நோக்குகிறது. நடைமுறையிலுள்ள சோஷலிச மெய்மைகளைப் பிரதிபலிக்கும் வகையில் ருசியப்புரட்சி நிகழ்ந்த போது அங்கு உருவெடுத்த “சோஷலிச நடப்பியல், ஈழத்துக்கவிதைகளில் சுரண்டலுக்கான எதிர்ப்பாகவும், வர்க்கப் போராட்டத்துக்கும் சமுதாய மாற்றத்துக்குமான வரவேற்பாகவும், பொதுவுடமைச் சமுதாய உருவாக்கத்துக்கான ஆதரவாகவும், மேதினத்துக்கான அறைகூவலாகவும், உழைப்புக்கும், அவ்வுழைப்பை நல்கும் பாட்டாளிக்கும் பாராட்டாகவும் ஒலித்தது.
           இலங்கையில் நிலவுடமையாளர்களின் ஆதிக்கம் வேரூன்றிய நிலையில் தனிநபர் சுரண்டல் வலுத்தது. ஆங்கிலேயர் ஆட்சியைத் தொடர்ந்து கைத்தொழிற் பேட்டைகள் முக்கியத்துவம் பெற்றன. இலாப நோக்கைக் கருத்தில் கொண்டு இயங்கிய பெரும்பாலான கைத்தொழிற்சாலைகள் மக்கள் நலத்தைக் கருத்தில் கொள்ளவில்லை. அத்தொழிற்பேட்டைகளில் முதலை நல்கிய முதலாளிகள் அங்கு கூலியாட்களாக வேலை பார்த்த தொழிலாளர் வாக்கத்தினரின் உழைப்பைச் சுரண்டினர்.இதன் வெளிப்பாட்டை ஈழத்துக்கவிதைகளும் பிரதிபலித்தன. இக்கவிதைகள் முதலாளித்துவத்துக்கு எதிரான குரலாகவும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு ஆதரவான குரலாகவும் உருவெடுத்தன.
 “உழைப்பாளித் தோழா உன் கரங்களிங்கு
  உயர்ந்து விட்டால் விலங்கெல்லாம் தகர்ந்து போகும்
  உழைப்போரைச் சுரண்டுகின்ற அமைப்பும் சாயும்
முதலாளித்துவப் பொருளாதாரமுறை, மக்கள் யாவரையும் சமத்துவமாக மதிக்கும் சமவுடமை பொருளதாரமுறை ஒன்று உருவாக்கப்படுவதற்கு முட்டுக்கட்டையாக அமையலாம். ஆனால் அதன் வரவைத் தடுக்கமுடியாது. இதனைச் சாருமதியின் கவிதைகளிலும் காணலாம்.
  “வர்க்கப் போரின்
   வழியை மறிக்கலாம்
  அதன் வரவைச்
  சிதைக்க
 முடியாது
 ஏனெனில் அது
அஸ்தமிக்காத சூரியன்
 ஆம் இன்றைய
 இலங்கைக்கும்
இதையே நான் செய்வேன் ”
மக்களிடையே சமத்துவத்தைப் பேணும் சோஷலிசம் ஈழத்துக்கவிஞாகள் பலரால் மதித்துப் போற்றபட்டது. அக்கனவு 1980களில் ஈழத்துக்கவிதைகளில் கோலொச்சியது.
    “சோசலிசம் என்று
     சொன்னாலே போதும்
     சுகமாக இருக்கும் 
     சொர்க்கம் அதுதானே!
    வேஷ மதில் இல்லை
    வேறு பாடில்லை
     வெயர்வை மிகச் சிந்தும் 
     வேலை தான் உண்டு
      சமத்துவமாம் புதிய
     சாம்ராஜ்ஜியம் அதிலே
     சகலரும் பிரசை சரியாசனம் எங்கும்! ”
உழைப்பையும் உழைக்கும் வர்க்கத்தையும் மார்க்சியசித்தாந்தம் போற்றுகின்றது. உழைப்பாளார் பேதங்களை மறந்து தமக்குள் ஒன்றுபடும் போது பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். புதுவை இரத்தினதுரையின் “என் கவிதை நெஞ்சில் உரம் கொண்டு எழும் பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியைப் பாடுகிறது.
     “பாராளும் வர்க்கமது பாட்டாளி வர்க்கம் ...புயலாக எழுந்திங்கு போராடி
      நாளை புதியதொரு வையமதைப் பிறப்பிக்கப் போகும் ”
புதுவையின் வரிகள் பொதுவுடமைச் சித்தாந்தத்தை வரவேற்று உழைக்கும் வர்க்கத்தின் உயர்வைக் கண்டு பொங்கிப் பூரிக்கிறது.
           வரலாற்றுப் பொருள் முதவாதத்தை முன்னிறுத்தி கார்ல்மார்க்ஸ் கூறுவதைப் போன்று முதாளித்துவச் சமூக அமைப்பில் ஏகபோக முதலாளித்துவம் தலைதூக்கும் போது சுரண்டலுக்கு எதிரான வர்க்கப் போராட்டம் பாட்டாளி மக்களால் முன்னெடுக்கப்படும். அப்போராட்டம் பாட்டாளி மக்களின் ஆட்சியை ஸ்தாபிக்கும். இப்பின்னணியில் எழும் சுரண்டலுக்கு எதிரான கவிதைகள் உரிமைகளும் உடைமைகளும் பெற்று தொழிலாளர் நிறைவாக வாழவேண்டும் என்னும் கருத்தைக் கூறிநிற்கின்றன.
    “ஆண்டுகள் பலதாய் அடிமை நிலையில்
      அடியுதை பட்டவர்அழுது
      வாழ்ந்தவர்
      பூண்டுள்ள நிலையைப் போக்கிட எண்ணி
      போராடத் துணிந்து
       புரிந்தனர் செயல்கள்
        ...களத்தில் பாய்ந்து கவலை களைவோம்
         ஆண்டிடும்
     உங்கள் ஆணவம் அழிக்கும்
     அரிகள் நாங்கள்... ”
நாவண்ணனின் “கதை, கவிதை, கண்ணீர் அடிமைத் தளை அறுக்க எழும் வதையுண்ட பாட்டாளியின் எழுச்சியை பாடி நிற்கிறது. நாட்டின் வறுமை, சாதி, மதம், பிரதேசவாதம், சீதனம், சுரண்டல் முதலானவற்றைப் போக்க சோசலிசம் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து ஈழத்துக்கவிஞர்களும் அவர்கள் சார்ந்த அமைப்புக்களும் செயற்பட்டன. மார்க்ஸிய சித்தாந்தங்களை உள்வாங்கிக் கொண்ட “ஈழப் புரட்சி அமைப்பு , “ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முதலான அமைப்புக்கள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துடன் இணைந்த வகையில் இக்கருத்துக்களை முன்னெடுத்தன. அவ்வகையில் பசீரின் “வெளிச்சத்துக்கு வருவோம் இக்கருத்துக்களை உள்வாங்கி எழுதப்பட்ட கவிதையாகும்.
 “சோசலிச
கொழு கொம்பு கொண்டு
 மனித மரங்களில்
இன்னும்
 ஒட்டிக்கிடக்கும்
வறுமை அழுகல் 
பழங்களைக் கொய்து 
சிக்கலுக்குச் சிக்கெடுப்போம்...
 ”சாதி- மதம் 
பிரதேசவாதம் 
 இனம் - மொழி
 சீதனம், அநீதி
சுரண்டல் போன்ற
திமிங்கிலங்களை
கருத்துப்பற்றிக் கொண்ட
மக்கள் ‘நெத்தலிகள்
கூட்டமாக நின்று
 உடைத்துண்டு விடுகின்ற
விடுதலை- வெப்ப ஏப்பத்தில்
முதலாளிகளின்
ஆதிக்க நீரில்மூழ்கி
அவிந்து நாறிப்போகும்... ”
அதிகாரவா;க்கத்தின் எதிர்ப்பின் குரலைப் பதிவு செய்யும் “உரிமையின் கீதம், க.தணிகாசலம் தொழிலாளர்நலனில் கொண்ட அக்கறையையும் வர்க்கப்புரட்சி மீது அவர்கொண்ட ஈடுபாட்டையும் எடுத்துக் காட்டுகிறது.
 “உழைக்கும் மக்களின்
விடுதலை மூச்சு
அடுத்தவர்
உழைப்பை 
 பறித்திட எண்ணும்
 அதிகார வர்க்கத்தைச்
சுடும் நெருப்பு...”
தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலை என்பது முதலாளி வா;க்கத்தின் அழிவில் பிறக்கும் என்னும் கார்ல் மார்க்ஸின் கூற்றை க.தணிகாசலத்தின் கவிதை சுட்டிநிற்கிறது.
           உழைப்பாளர்தினம் எனப்படும் தொழிலாளா;தினமாகிய மேமாதம் முதலாம் திகதி 1856இல் தொழிலாளார் வர்க்கத்தின் தொடர்போராட்டத்தை தொடர்ந்து தொழிலாளரின் வெற்றிநாளாய் விடியல் நாளாய் எழுச்சிகண்டது. 1889ஆம் ஆண்டு முதல் உலகம் முழுக்க ஒட்டு மொத்த தொழிலாளர்களின் புரட்சி விழாவாக இது வியாபகம் பெற்றது. இந்நாளின் எழுச்சியை ஈழத்துக்கவிதையிலும் காணலாம். புதுவை இரத்தினதுரையின் “தென்னிலங்கைத் தோழனுக்கு, சடகோபனின் “மேதினம், நாவற்குழியூர் நடராசனின் “மேதினநாள், இ பவித்திரனின் “மே தினப்பாடல் முதலான கவிதைகள் மேதினத்தின் நோக்கையும் அதன் சிறப்பையும் நினைவு கூருகிறது.
           மேதினத்தன்று இன, மத பேதமின்றி செங்கொடிகள் தாங்கி, வர்க்கப் போராளிகள் சகிதம் அறைகூவி, அணிவகுத்து நிற்பதை புதுவை இரத்தினதுரையின் “தென்னிலங்கைத் தோழனுக்கு காட்சிச் சித்திரிப்பு வாயிலாக வெளிப்படுத்துகிறது.
 “நண்பா...
வருடத்தில் மேமாத முதல் நாளிற்
 சந்திப்போம். 
புதிய நகரசபை முன்றலிலே...
 செங்கொடிகள் தாங்கித் திரிவோம். 
 தலைவர்கள் எங்களுக்குத் தெரியாத- எத்தனையோ சொல்வார்கள்
 கைதட்டி ஆர்ப்பரித்துக் களிப்போம்.
பிhpந்திடுவோம்
 பொய்யில்லா
 இந்தப் ‘புரட்சிக்கனவுகளில் மெய்மறந்து தூங்க மேமாதம் வரும் 
 அப்போ... மீண்டும் சந்திப்போம்...
வடக்கிலிருந்து பஸ்ஸில் வருவார்கள்
தமிழர்கள்
 கிழக்கிலிருந்து பஸ்ஸில் வருவார்கள்  சோனகர்கள்
        தெற்கிலிருந்து பஸ்ஸில் வருவார்கள் சிங்களவர்கள்
எல்லோரும் சேர்ந்து
மேமாத முதல் நாளில்
 ‘வர்க்கப் போர் பற்றி வாதிடுவோம்            
 புரட்சிபற்றித்
தா;க்கங்கள் செய்வோம்
சமவுடமைச் சமுதாயம் பற்றிப்
  ‘பறைவோம், பஸ்சேறித் திரும்பிடுவோம்...” 
மார்க்ஸியக் கொள்கையின் தாக்கத்தால் ஈழத்தில் சோசலிச யதார்த்தப் போக்கை உள்வாங்கி வெளிவந்த கவிதைகள், மனிதனைக் குறித்து அதிகம் சிந்தித்தன. கொள்கைச் சித்தாந்த அடிப்படையில் சமூகத்தில் நிகழும் அநீதிகளைச் சுட்டிக்காட்டி எழுந்த தமிழ்க்கவிதைகள் ஈழத்து இலக்கியச் செல்நெறியில் புதிய வளர்ச்சிப் போக்கை உண்டு பண்ணியதுடன் மக்களிடையே மிக நெருங்கிய தொடர்பையும் கொண்டிருந்தன

வெறுமைக்குள் மயல் கொள்ளும் கனவுவெளி

0 comments


நிழல் இன்மையால் 
விலகிச் சென்ற மேகங்கள்
சூரியனை மறைத்து
தமக்கு அந்நியமான
நிழல்களை
உருவாகிக் கொண்டன
புலராப் பொழுதொன்றில்
சூரியனுக்குப் பயந்து
பூக்களுக்குள் ஒளிந்து கொண்டது
மனம்
காலைப் பனித்துளியில்
வண்டுகளின் ரீங்காரத்தில்
மகரந்தங்களை இழந்தபடி
கழியும் காலம்
நிழற்ற
ஒரு புல்வெளியைப்போல

சி.ரமேஷ்

ஈழத்து தமிழ்க் கவிதைப் புலத்தில் முஸ்லிம் கவிஞர்களின் வளமும் - வளர்ச்சியும்

1 comments


(1950-1970காலப்பகுதிகளை முன்வைத்து)  - சி.ரமேஷ்

 ஈழத்திலக்கிய வரலாற்றில் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகள் முக்கியமான காலப்பகுதியாகும்.நவீன தமிழ்க்கவிதைகள் பல, இஸ்லாமியரால் இக்காலப் பகுதியில் கணிசமான அளவுக்கு உருவாக்கப்பட்டன.இனமொழியை முக்கியத்துவப் படுத்தி இலங்கையானது சமூக,அரசியல் மாற்றங்களுக்குட்பட்ட போது தேசியம், தேசிய ஒற்றுமை பற்றிய கருத்துகளின் வளர்ச்சியும் அதனவசியமும் இக்காலப் பகுதியில் உணரப்பட்டன. பழைய தமிழ்மொழியை அடியொற்றிய பண்டிதப் போக்கில் இருந்து சற்று விலகி தற்கால மொழி நடைப் போக்கைப் பின்பற்றி எழுதிய புதியவர்கள் பலரைத் தன்னோடு இணைத்துக் கொண்ட நவீன கவிதை அர்த்தமும் ஆழமும் கொண்ட வீரியமிக்க கவிதையாக எழுச்சி பெற்ற காலப் பகுதி இது எனலாம்.அண்ணல்(ஜனாப் எம். எஸ்.எம்.சாலிஹ்),புரட்சிக் கமால் (மர்ஹீம் எம்.எம்;.சாலிஹ்),யுவன் ,சுபைர் அப்துல்காதர்லெப்பை, புலவர் மணி, ஆ.மு.ஷாிப்புதீன் முதலான கவிஞர்களின் எழுச்சியுடன் ஈழத்துத் தமிழ்க் கவிதை புத்துயிர்ப்பைப் பெறுகின்றது.
           “ஆதிமுதல் இன்றளவும் வளர்ந்தாலும் ,தேதி
            இலாத சிறந்த படைப்பின்றும் வேண்டும்
            தமிழுக்கெனும் அவ்விருப்பத்தால் ஈண்டுபுதியது
            எழுதி அளக்கின்றார்”
என மஹாகவியால் புகழப்பட்ட அண்ணல் “அவள்” என்னும் கவிதையுடன் இலக்கிய உலகுக்குப் பிரவேசித்தவா;.காதற் பாடலுக்கு ஓh; அண்ணல் எனச் சிறப்பிக்கப்படும் இவர்தனி மனித மனத்தின் உன்னத உணாச்சிகளை அலங்காரத் தன்மையற்று தெள்ளிய தமிழில் பாடியவர் இவருடைய “அவள்” என்னும் கவிதை இதற்குத் தக்க சான்று பகர்கிறது.
            “உச்சிவானம் பிளந்த மின்னல்
             உதட்டித் காட்டுறா
             மச்சானென்று துள்ளும் மனதை
              மறைத்துப் பூட்டுறா
             கரியநாகம் போலப் பின்னல்
             கண்ணை யுறுத்திட
         
             விடியும் விழியை உயிரை உண்ண
             விரட்டி விடுகிறா
             செக்கா; வானச் சிவப்பை உடம்பிற்
             சேர்த்து வைத்தவ
             புக்கம் நெருங்கிப் போனா மட்டம்
             பயந்தேன் சாகிறா”    
                                                              (அண்ணல் கவிதைகள் பக்19-20)
வேட்கை மிகுதியால் உள்ளத்திற் சடைத்துப் படரும் உன்னத உணர்வுகள் இங்கு செம்மை சார்ந்த சொற்களுக் கூடாகக் கவிதையாகிறது.இவரின் ‘அண்ணல் கவிதைகள்’ என்னும் தொகுப்பு  ‘இறை வணக்கம்’ முதல் ‘சிரிக்கினறேன்’ ஈறாக 43கவிதைகளை உள்ளடக்கியது. இறைத்துவம், காதல், சமத்துவம் என்னும் தளங்களில் இயங்கும் எளிமையான இக்கவிதைகள் ஓசை நயமிக்கவை.ஆழ்ந்த பொருட் செறிவுமிக்கவை.மரபின் பிடிக்குள் ஆட்பட்டு காதலை அழகியல்த் தன்மையுடன் வெளிப்படுத்தும் அண்ணல் கவிதைகள் தன்னிச்சையான மன உணர்வின் தடத்திலேயே இயங்குகின்றன.இதுவரை காலமும் கனத்த சொல்லழங்காரம், அணியலங்காரத்துடன் கடின வயப்பட்டிருந்த ஈழத்துத் தமிழ்க் கவிதை மொழியைச், சாதரண மக்களும் விரும்பி படிக்கத் தக்க வகையில் பேச்சு மொழிக்கு நெருங்கிய தொன்றாக உருவாக்கியதில் அண்ணல் முதன்மை பெறுகிறார்.
     இக்காலப் பகுதியில் புரட்சி நோக்காலும் சிறந்த கற்பனையாற்றலாலும் செழுமையான கவிதையைப் படைத்தவர் மர்ஹூம் எம்.எச்;.சாலி என அறியப்படும் புரட்சிக்கமால் ஆவார்.
  “தமிழ் இலக்கிய மரபினை அனுசரித்து, இஸ்லாம் வற்புறுத்தும் நம்பிக்கை,  சமத்தவம்,சகோதரத்துவம் முதலிய இலட்;சியங்களை இஸ்லாமியப் புலவர்களின் உணர்வு வழிநின்று உணர்ச்சி செறிவுடன் பாடுபவர்”
ஏனப் பேராசிரியார் க.கைலாசபதியால் சிறப்பிக்கப்படும் புரட்சிக்கமால் வாழ்ககை நிலையாமை பற்றிய கருத்துகளுக்கு முதலிடம் கொடுத்து இறை ஞானத்தையும் மறை ஞானத்தையும் விளக்கும் ஆன்மீகக் கவிதைகளைச் சமூக நோக்கில் வெளிப்படுத்தியவர் பேராசிhpயர் க.கைலாசபதியின் மதிப்புரையுடன் வெளி வந்த “புரட்சிக்கமால் கவிதைகள்” என்னும் தொகுதி ‘காணிக்கை’ தொடக்கம் ‘விளக்கத்துணை’ ஈறாக 77கவிதைகளைக் கொண்டது.சூபித்துவ மெய் ஞானக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட இக்கவிதைகள் மனித வாழ்க்கையில் ஆழமான நம்பிக்கைகளை விதைப்பவை.சமத்துவமான புதிய சமூக மொன்றைத் தரிசிக்க விளைபவை.
            “ ஆணென்றும் பெண்னென்றும் பேதமில்லை
              அனைவருக்கும் சமஉhpமை உண்டு என்று
              மாண்புயா;ந்த எமதிஸ்லாம் செப்புதென்று
              மடைதிறந்த வௌ;ளம் போல மேடையேறி
              வீண் கூச்ச லிடுகின்றீர் உங்கள் பேச்சில்
              விழிப்புற்ற மங்கையினைத் தட்டிப் பேசி
              தீண்டுகிறீர் உரிமையினை‘பர்தா’ என்னும்
              திரையிட்டு மறைக்கின்றீர்  நீதியீதோ”
மதத்தைக் கடந்து பெண் சமத்துவத்தைப் பாடும் உயர்ந்த உள்ளம் கொண்ட புதுமைக் கவிஞனின் புரட்சிக் குரலாய் ஒலிக்கும் இக்குரல் ஏற்றம் காணத்துடிக்கும் சமுதாய எழுச்சியைக் கோரி நிற்கிறது.அறப் போதகராயும் ஆத்ம ஞானியாயும் இலக்கிய ஆர்வலராகவும் வாழ்ந்த புரட்சிக் கமால்
                                       “சாதி ஒன்றாய் நிறமொன்றாய்
                                        சமயம் ஒன்றாய் மொழி ஒன்றாய்
                                        நீதி ஒன்றாய்"
எனப் பாடியமைக்கமைய அவ்வழி வாழ்ந்தவர்அண்ணல் காந்தியின் அகிம்சாவழி நின்று சமூகப் பிரக்ஞை மிக்க கவிதைகளைத் தந்தவர்.
புரட்சிக்கமாலைப் போன்று மரபுவழிக் கவிதைகளுக்கூடாகச் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை சமயவழி நின்று வெளிப்படுத்தியவர் அப்துல் காதர்லெப்பை ஆவார் 1941-1942இல் சென்னை ‘தாருல் இஸ்லாம் சஞ்சிகையில் ‘அதான்’ என்னும் பெயருக்கூடாக அறியப் படுமிவர்“ஆசிரியர் திலகம்” என்னும் விருதுப் பெயராலும் சிறப்பிக்கப்பட்டவர்.1950களில் இலக்கியத் துறையிலிருந்து சற்று விலகியவராகக் காணப்பட்ட இக்கவிஞர் 1960களில் ஈழம் போற்றும் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரானர். இவ்வகையில் மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லிங்களிடம் நிலவும் ஆசாரங்களை அடித்தளமாகக் கொண்டு  அப்துல்காதர் லெப்பையால் பாடப்பட்ட செய்னம்பு நாச்சியார் மான்மியத்தைக் கூறலாம்.சமூகக்குறைபாடுகளையும் சீர் கேடுகளையும் பாடும் முகமாக எழுந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்”, பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் 'சீதனக்காதை”, என்னும் அங்கத நுhல் வரிசையில் எழுந்த காவியமாக இதனைக் கொள்ளலாம். “சமுதாய வழக்கக் குறிப்பேடு”  எனப் பேராசிரியர் சு.வித்தியானந்தனால் சிறப்பிக்கப்படும் இந்நூல் ஈழத்து இஸ்லாமி யரின் திருமணச் சடங்கினைக் கற்பனையாற்றலும் கவியமைப்பும் பொருட்சிறப்பும் பொருந்தும் வண்ணம் எடுத்துரைக்கிறது. இது தவிர இக்காலப் பகுதியில் கவிஞரால்  ‘இக்பால் இதயம்;  ‘இரசூல் சதகம’;,ஷமுறையீடும் தோற்றமும்’ முதலான மரபுக் கவிதைத் தொகுப்புக்கள் வெளிக் கொணரப்பட்டன.
   வெண்பாப்புலி, இலக்கிய மாமணி, நுhறுல் பன்னான் என்னும் பட்டங்களினால் சிறப்பிக்கப்படும் புலவா;மணி அல்ஹாஜ் ஆ.மு.‘hpபுத்தீன் விபுலாநந்தாpடம் கவி பயின்று செந்தமிழில் யாப்பமையக் கவி பாடியவா;. இவா; மட்டக்களப்பில் ஆசிhpயராகக் கடமையாற்றிய காலப் பகுதியில் அங்குள்ள     நாட்டுக்கவிகளை ஒன்று திரட்டி வாதுக் கவிச் சித்திரமாக அமைத்து பாடசாலை மேடைகளில் அரங்கேற்றிக் கட்புலக் கலையாகவும் மாற்றியமைத்தவர் 1952 ஆம் ஆண்டு அரசின் வேண்டுகோளுக்கமைய க.பொ.த.சாதாரண வகுப்புக்காக தேந்தெடுக்கப் பட்ட சீராப்புராண பதுறுப் படலத்துக்கு உரையெழுதிய இவர், சமூகத்தில் மார்க்க அறிவைப் பெருக்குதல் பொருட்டு 1967 இல் பெருமானார்  (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைத் தெரிந் தெடுத்து வெண்பா யாப்பில் “நபிமொழி நாற்பது” என்னும் நூலை யாத்தார். 1969 இல் இந் நூலுக்கான சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றுக் கொண்டார்.
                “ அகில உலகிற்கும் ஆன்மிக வாழ்வும்
                 இக வாழ்வும் நல்கும் இனிய - புகழாகும்
                  நம்பிநபி நாயகனார் நன்மொழிக ளெம்மொழிகள்
                  நம்பினார் சோர்வார் நலம்”
எனப் புலவர்மணி பெரியதம்பிப் புலவரால் சிறப்பிக்கப்படும் இந்நூல் இஸ்லாமியருக்கு மட்டுமன்றி ஏனையோருக்கும் தேவையான வாழ்வியல் விடயங்களை விளக்கி நிற்கிறது.இதனை அடுத்து இக் காலப் பகுதியில் “சயிதா” என்னும் கவிதை நூலையும் வெளியிட்டார்.'வெண்பாவி லென்னை நீ வென்றாய்” எனப் புலவர்மணி அவர்களால் சிறப்பிக்கப்படும் இவர் 1969 இல் ‘புலவர் பட்டம்’ வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
    இக்காலப் பகுதியில் மலையகத் தமிழகம் தந்த கவிஞர் எம்.ஸி.எம்.சுபைர் ஆவார் 1948 பங்குனி “சமுதாயம்” என்னும் சஞ்சிகையினூடாக இலக்கிய உலகில் காலடி பதித்த சுபைர் 1954 இற்குப் பின் வானொலிக் கலைஞராகவம் கவிஞராகவும் அறியப்பட்டவர்.  1956 இல் இவரினால் வெளியிடப்பட்ட ‘மலர்ந்த வாழ்வு” என்னும் சிறுகாவியம் அரச அங்கீகாரத்தைப் பெற்று பாடசாலை மாணவா; பயில்வதற்குhpய உப பாட நூலாகக்கப் பட்டது.1967 இல்'மலரும் மணமும்” என்னும் பாலர் பாமாலைக் கூடாகக்  குழந்தைக் கவிஞராகவும் அறியப்பட்ட இவர் 1969இல் மட்டக்களப்பு கிராமியக் கவிதைகளைக் “கண்ணான மச்சி” என்னும் பெயரில் தொகுத்தளித்தார். இந்நூலே இவரைப் புடம் போட்ட புலமையாலனாகவும் வெளியுலகுக்கு உணர்த்தியது. 1960 - 1964 காலப் பகுதியில் மாணவர் நன்மை பொருட்டு இவரால் தொடங்கப் பட்ட “மணிக்குரல்” என்னும் சஞ்சிகை மலையக இலக்கியத்தில் ஒரு மைல்கல் எனலாம்.கவிஞர்அப்துல் காதர்லெப்பையின் இரண்டாவது கவிதாப் பிரவேசம் இச்சஞ்சிகையின் வருகையுடனேயே புத்தெழுச்சி பெற்றது. சுதந்திரன், தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைக் கூடாகவம் ‘மணிவிளக்கு’,  ‘பிறை’,  ‘முஸ்லிம் முரசு’, முல்லை போன்ற தமிழ் நாட்டுச் சஞ்சிகைக் கூடாகவும் நன்கறியப்பட்டவர். ஸூபைர் மலாயவிலுள்ள  “நறுமணம்”  சஞ்சிகையிலும் எழுதியவர். ஈழத்திலக்கிய வரலாற்றில் சுபைரின் இடமும் இருப்பும் விரிந்த நோக்கில் ஆராயப் படவேண்டியது காலத்தின் தேவையாகும்.
       1950களில் “அன்னம்”என்னும் கையெழுத்துச் சஞ்சிகைக் கூடாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். பாவலர் பஸீல் காரியப்பர்ஆவார்;.‘ஷதிபுத்தீன், ஈழமேகம் (பக்கீர்த்தம்பி), ஏயாரெம்(சலீம்) முதலானோரின் தூண்டுதலால் கவிதை உலகுக்கு பிரவேசித்த பஸீல் காரியப்பார் நலிந்த மனிதனுக்காக இரங்கி நம்பிக்கையூட்டும் மனித உறவுகளைக் கவிதையாகப் பாடியவர். "உயிர்”, "பதுகை”, கவிதைகளுக் கூடாகப் பலரால் அறியப்பட்டவர்.  பஸீல் காரியப்பா;  முற்கூறிய இக் கவிதைகளுக்காக முறையே முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடாத்திய “தங்கத் தாத்தா”,கவிதைப் போட்டியிலும் நீலாவணன் பேரவை நடாத்திய கவிதைப் போட்டியிலும் பரிசில்களைப் பெற்றவர். “கவிதை பிறந்தது” என்னும் வானொலி நிகழ்ச்சிக் கூடாக ஈழத்து இலக்கிய உலகுக்குப் பலரை அறிமுகம் செய்த பஸில் காரியப்பர். வானொலியில் “கவிதைச் சரம்” என்னும் நிகழ்ச்சியையும் நடாத்தியவர்.இவர் எழுதிய “அழகான இருசோடிக் கண்கள்”என்னும் மெல்லிசைப் பாடல் இன்றும் என்றும் இவர் புகழைப் பாடும்.
    1950 களின் பிற்பகுதியில்  கலை இலக்கிய உலகிற்கு அடியெடுத்து வைத்த எம்.எச்.எம் ஷம்ஸ் புனைகதை, கவிதை, சிறுவர; பாடல்கள், விமாp;சனம், புகைப்படத்துறை எனப்பல்வேறு தளங்களில் இயங்கியவர; அபுசாலி அப்துல்லதீஃபை ஆசிரியராகக் கொண்டு உருவான இன்சான் பண்ணையில் வளர;ந்த ஷம்ஸ், “பாஹிரா”, “அஷ்ஷம்ஸ்”, ஆபுபாஹீம்”, “நீல்கரைநம்பி”, “நீல்கரை வையோன்:, “வல்வையு+ர;ச்செல்வன்”, என்னும் புனை பெயருக்கூடாகவும் அறியப்பட்டவர;. ஆரம்பத்தில் மரபுக்கவிஞராக இருந்து வெண்பாக்களை யாத்;த  இவர; பிற்பட்ட காலங்களில்  புதுக்கவிதைகளையும் ஹைகூகவிதைகளையும் எழுதியவர;. இவை பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டவர;.

1950களில் கிழக்கிலங்கை தந்த இஸ்லாமியக் கவிஞர;களில் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர;களில் ஒருவர;. மருதூர;க்கொத்தன். வி.எம்.இஸ்மாயில் என்னும் இயற்பெயர; கொண்ட மருதூர;கொத்தன் மருதமுனை அரசினர; தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆ.மு.ஷரிபுதீன் உபாத்தியாரிடம் கல்வி பயின்றவர;.ஆ.மு.ஷரிபுதீனின் தூண்டுதலால் இலக்கிய உலகிற்கு புகுந்த இவர;, சுதந்திரனின் “இலக்கியப் பு+ங்கா” ஊடாகவும் நன்கறியப்பட்ட வளமான எழுத்தாளர;களில் ஒருவராக விளங்கினார;. கற்பனை நயமிக்க இறுக்கமான மரபுக்கவிதைகளை எழுதிய மருதூர;க் கொத்தனின் கவிதைகள் தொகுக்கப்பட்டு 1977 இல் “காவியத்தலைவன்” என்னும் பெயரில் வெளிவந்தது. இக்கவிதைத் தொகுதியை ‘ஆ+பு+ஹபினா’ என்னும் பெயரிலேயே வெளியிட்டார;.மரபுக்கவிதையிலிருந்து முற்றுமுழுதாகத் தமிழ்க்கவிதை விடுபடாத சூழ்நிலையில் புதிய போக்குகள் சிலவற்றைக் கொண்டு நவீன கவிதைகள் அரும்பும் காலமாக இக்காலகட்டத்தைக் கூறலாம். விடுதலைக்குப் பின்னர; ஏற்பட்ட சமூகமாற்றம் அவை குறித்த ஏமாற்றங்களும் அவற்றின் விளைவுகளும் கவிதையின் புதிய பாடுபொருளாயின. நகரமயமாதல், தொழில்மயமாதல், பெண்ணியம,; சமூக ஏற்றத்தாழ்வுகள் எனப் பன்முத தளங்களை மையப்படுத்தி ஈழத்துக் கவிதைகள் எழுந்தன. மரபுத்தளையில் இருந்து முற்று முழுதாக விடுபடாது, புதிய பாடுபொருளைக் கொண்ட உள்ளடக்கத்துக் கூடாக ஈழத்துத் தமிழ்க்கவிதைகள் நவீன கவிதையாக பரிணமித்தன.

1960 களுக்குப் பின் முஸ்லீம் கவிஞர;களால் படைக்கப்பட்ட ஈழத்துத் தமிழ்க்கவிதைகள் சமூகப் பிரக்ஞையும் முற்போக்குச் சிந்தனையும் கொண்ட நவீன கவிதையாக உருக்கொண்டன. இனரீதியான அரசியல் எழுச்சியும் தேசிய விழிப்புணர;வும் ஏற்பட்ட இந்தக் காலப்பகுதியில்  ஈழமெங்கும் மொழிப்பிரச்சினை பு+ரண விசுவரூபமெடுத்தது, இதன் காரணமாக சமூகத்தின் மேலாதிக்கத்தை எதிர;ப்பதை நோக்காகக் கொண்டும் அதே இனங்களுக்கிடையே சமத்துவ ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வகையிலும் கவிதைகள் பல எழுந்தன. எம்.ஏ.நுஃமான், ஏ.இக்பால், மருதூர;க்கனி, அன்பு முகையதீன், பண்ணாமத்துக் கவிராயர;, சாரணா கையு+ம,; திக்குவல்லை கமால் என ஏராளமான முஸ்லீம் கவிஞர;களின் எழுச்சியும் அளுத்கம முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் இலக்கிய முயற்சியும் ‘தினகரன்’, ‘வீரகேசரி’ இதழ்களில் இஸ்லாமியருக்கு ஒதுக்கப்பட்ட முஸ்லீம் பக்கங்கள் என்ற பகுதியும் ‘இன்சான்’, ‘கவிஞர;’ முதலான சஞ்சிகைகளின் வருகையும் முஸ்லீம்களினால் எழுதப்பட்ட கவிதையை பிறிதொரு தளத்துக்கு இட்டுசச் சென்றன.

1960களில் முகிழ்ந்த மூன்றாம் தலைமுறைக்கவிஞர;களுள் முக்கியமானவராகக் கருதப்படும் எம்.ஏ.நுஃமான் நீலவாணன், மஹாகவி ஆளுமையின் கீழ்த்தன்னைப் புடமிட்டுக் கொண்டவர; அரம்பத்தில் காதல், இயற்கை, பிரிவு எனத் தன்னுணர;வு சார;ந்த கவிதைகளை முன்னையவரின் தொடர;ச்சியாக எழுதிய நுஃமான் பிற் காலத்தில் மனோரீதியப்பாங்கு நீங்கி நடப்பியல் வாழ்வைச்சித்தரிக்கும் தனித்துவமான கவிதைகளைப் படைத்தவர; “மீட்சி”, “நம்பிக்கை”, “கனவும் காரியமும்” முதலான கவிதைகள் பல, இத்தளத்திலேயே இயங்குகின்றன. மாக்ஸிய நோக்குடைய முற்போக்கு கவிஞராக அறியப்பட்ட எம்.ஏ.நுஃமான் சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான கவிதைகளை அதிகம் எழுதியவர;. வர;க்க முரண்பாடுகள், வர;க்க மேலாதிக்கத்தைக் களைந்து சமதர;ம சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் ஓங்கி ஒலித்த நுஃமானின் குரல் சமகாலப் பிரச்சினையைச் சமூகப் பிரக்ஞையுடன் அணுகியது. ‘அதிமானிடன்’, ‘கோயிலின் வெளியே’, ‘நிலம் என்னும் நல்லாள்’ என்னும் கவிதைகள் இதற்குத் தக்க சான்று பகர;கின்றன.
வைப்புகளினூடாகக் கருத்துக்களை முன் நிறுத்துவதாலும் (நேற்றைய மாலையும் இன்றைய காலையும்) நிகழ்ச்சிக் கோவைகளின் வழியே கருத்துக்களை முன்நிறுத்துவதாலும் (நிலமெனும் நல்லாள்) கவிதையைக் கலையாக்க நெறியாக்கிக் காட்சிப்படுத்துவதாலும் (நாடகப்பாங்கில் வெளிப்படும் கோயிலின் வெளியே) வரலாற்றுக்கூடான எடுத்துரைப்பியலாக விளங்குவதாலும் (அதிமானிடன்) நிகழ்வுகளைப் பு+டகமாகச் சரித்திர வாயிலாக வெளிப்படுத்துவதாலும் தாத்தாமர;களும் பேரர;களும்) நுஃமானின் கவிதைகள் ஆழமான பொருளுவம் கொண்டவையாக விளங்குகின்றன. அலங்காரத்தன்மையற்று கருத்து நுட்பமாக விளங்கும் நுஃமான் கவிதைகள் ஓசை நயம் கொண்டவை. கட்டற்ற உணர;வுகளின் வழி எளிமையான நடைமுறையிலமைந்த கச்சிதமான வடிவத்தைக் கொண்ட நுஃமானின் கவிதைகள் புதிய உள்ளடக்கம,; புதிய வெளிப்பாட்டு முறைகளுக்கூடாக நவீன கவிதையைhகத் தன்னை அடையாளப்படுத்தியது.
‘அரும்பு’ (கையெழுத்துப்பிரதி) ‘சுவை’ (ரோனியோப்பிரதி) என்னும் சஞ்சிகைகளுக்கூடாக  1965 இல் படைப்பிலக்கியவாதியாகப் பிரவேசித்த திக்குவல்லை கமால் தினபதிப் பத்திரிகைக் கூடாகத் தமிழ்க்கவிதையுலகில் நன்கறியப்பட்டவர;. வெற்றுச் சொற்களுக்கூடாக அலங்காரத் தன்மையுடன் எழும் திக்குவல்லைக்கமாலின் கவிதைகள் உணர;வின்  மேலாண்மையோடு கருத்துக் குவிப்பாகவே காணப்படுகின்றன.

மஹாகவி, நீலவாணன், முருகையன், வி.கி.ராஜதுரை முதலானோரின் கவிதைகளைப் படித்த அருட்டுணர;வினால் கவிதை உலகிற்கு காலடி எடுத்து வைத்த எம்.எம்.பாறுக் பாடசாலைக்காலத்தில் இஸ்லாமியப்பாடல்களை எழுதியவர;. பின்னாளில் தாரகை மூலம் பண்ணாமத்துக்கவிஞராக அறிமுகமான இவர; வங்கக் கவிஞர; ஹரேந்திரநாத் சடோபாத்யாயருடைய கவிதைகளைத் தமிழிலக்கியத்திற்கு அறிமுகம் செய்தார;. சமதர;ம கருத்துக்களால் கவரப்பட்ட பண்ணாமத்துக்கவிராயர; அடிநில மக்களின் வாழ்வியல் அவலங்களை கவிதைகளாக வடித்தாh;. தேசாபிமானியில் வெளிவந்த “நாலு வாய்ச் சோறு” உள்ளிட்ட  கவிதைகள் சில இதற்குத் தக்க சான்று பகர;கின்றன.

1960களில் தினகரன் பாலர; கழகத்திற்கு எழுதிய கவிதையையடுத்து இலக்கிய உலகுக்கு பிரவேசித்த அன்பு முகைதீன் பின்னர; ஸாஹிராக்கல்லூரியிலிருந்து வெளிவந்த “உதயஜோதி” என்னும் கையெழுத்துச் சஞ்சிகைகக்கூடாக அனைவராலும் அறியப்பட்டவர;. சமூக உணர;வோடு  மனிதாபிமானியாகக் கவிதைபாடும் அன்பு முகைதீன் முருகையன் கூறுவதைப் போன்று காதலன் - காதலி, தாய் - குழந்தை, தந்தை - பிள்ளைகள், ஆசிரியர; - மாணவர;கள், அகதிகள் - மேன்மக்கள், கவிஞர;கள் - கலைஞர;கள், வறியோர; - செல்வர; என மனிதர;களுக் கிடையில் நிலவும் உறவு விகற்பங்களைக் கவிதையாகப் பாடியவர;.

ஆரம்ப காலத்தில் அழகியற் கவிஞராக விளங்கி பின்னர; முதிர;ச்சி பெற்ற கவிதாளுமைகளாய் விளங்கியவர;கள் மருதூர;கனி, எம்.எச்.எம்.புஹாரி (பலாஹி) முதலானோரைக் கூறலாம். வீரகேசரியில் “அவள்” என்னும் கவிதைக்கூடாக இலக்கிய உலகிற்கு பிரவேசித்த மருதூர;க்கனி அக்காலத்தில் வெளிவந்த தினகரன், கவிஞன் இதழ்களுக்கூடாகவும் அறியப்பட்டவர;. மருதூர;க்கனியைப் போன்று கிழக்கிலங்கையிலிருந்து தோன்றிய பிறிதொருவர; எம்.எம்.அஸ்ரப் ஆவார;. கவிஞர; திலகமென அழைக்கப்பட்ட இவர; சமயம், அரசியல், காதல், குழந்தைப் பாடல்கள், இசைப்பாடல்கள் எனப் பன்முகப்பட்ட கவிதைகளை எழுதினார;. கற்பனை கலந்த அதிக வர;ணணையுடன் கூடிய அஸ்ரப் கவிதைகள் விசாலமான சிந்தனைப் புலத்தில் கட்டுறுபவை. நேர;த்தியான வடிவமைத்துக் கொண்ட இக்கவிதைகள் மனித வாழ்வியலைப் பாடுபவை.

பதுளையைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட என்.எஸ்.ஏ.கையூம், காரணா கையு+ம் என்னும் புனைப் பெயரைக் கொண்டவர;. குழந்தைக் கவிஞராக ஆரம்பத்தில் விளங்கிய கையு+ம் பின்னர; சமூகம் சார;ந்த கவிதைகைள இஸ்லாமியக் கருத்துப்புலத்தில் படைத்தவர;. ‘குழந்தை இலக்கியம்’, ‘குர; ஆன்ஹதீஸ்’, ‘நபிகள் நாயகம்’, ‘கவிதை நெஞ்சம்’, ‘சிறுவர; பாட்டு’, ‘நன்னபிமாலை’, ‘என் நினைவில் ஒரு கவிஞர;’ முதலான நூல்களை எழுதிய காரணா கையு+ம் சிறுவர;களுக்காக ‘பாரதி’ என்னும் சஞ்சிகையை நடாத்தியவர; ‘குழந்தைக் கவிஞர;’, ‘கவிமணி’, ‘நஜ்முஸ் ஸப்ஹர’ (கவித்தாரகை) ‘நூருள் கஸீதா’ (கவிச்சுடர;;) ‘கலாபு+ஷணம்’ முதலான பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற இவர; 1961 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரை எழுதி வருபவர;.
1969இல் “தியாகச்சுடர;” என்னும் ‘இமாம் ஹீசைன் (ரலி)’ அவர;களின் சோக வரலாற்றை பாடிப் பாராட்டுப் பெற்ற கவிஞர; கல்ஹின்ன எம்.எச்.எம்.ஹலீம்தீன் இஸ்லாமிய வரலாற்றையும் வாழ்வியலையும் மனித நேயத்துடன் பாடுபவர;. மனித மனதில் உள்ளுறைந்து கிடக்கும் அசுர இயல்புகள், பண்பாட்டு நிவைகளைப் பாடிய ஹலீம்தீன் கல்லூட்டு கவிராயர; என்னும் புனைப் பெயருக்கூடாகவும் அறியப்பட்டவர;.

இக்காலப் பகுதியில் நற் கவிதைகளைத் பலவற்றைத் தந்தும் பரவலாக அறியப்படாதவராக யு.எஸ்.ஏ.மஜீத், யு+.எல்.எம்.குவைலித் (மறையும் நிழல்), ஏறாவு+ர; யு+சுப், யு+.எம். தாஸிம் (கம்மல்துறை மறைதாசன்) மர;ஹீம் ஈழமேகம், எம்.ஐ.எம்.பக்கீர;த்தம்பி முதலானோரைக் கூறலாம். இவர;களில் பெரும்பாலானோர; ஓசைநயமிக்க மரபுக்கவிதைக்கூடாகவே அறியப்பட்டவர;கள்.

1950களின் நடுக்கூற்றில் முக்கியத்துவப்படுத்தப்பட்ட சுதேசியக்கல்வி இனங்களின் பண்பாட்டு வேர;களைக் கண்டறிவதற்கு கால்கோலிட்டது. தேசம் பற்றிய விழிப்புணர;வு இனம், மொழி பற்றிய பிரக்ஞையும் முக்கியத்துவம் பெற்ற சூழலில் நவீன கூறுகளை உள்வாங்கி எழுந்த தமிழ்க்கவிதை முஸ்லீம் கவிஞர;களால் வளம் பெற்றது. புதுக்கவிதையில் தனிமனித உணர;வுநிலையும் சமூகநிலையும் ஆரோக்கியமான முறையில் அணுகப்பட்ட காலப்பகுதி இதுவென்பதால் சமூக உணர;வும் (மக்கள்), சமகால உணர;வும் (எதார;த்தம் பற்றியது) வரலாற்றுணர;வும் (ஆன்மீக கலாச்சார மனித மதிப்புக்களின் தொடர;ச்சியில் மனிதனின் வளர;ச்சி பற்றியது) எதிர;கால உணர;வும் மிக்க கவிதைகளை முஸ்லீம் கவிஞர;கள் படைத்தனர;. அவ்வகையில் காலத்தின் கருவு+லமாகவும் நிதர;சனத்தின் நிழற்படிவமாகவும் விளங்கும் இக்கவிதைகள் ஆழமானது. அகற்சியானது. புதிய அர;த்தப் பெறுமானங்களை உள்வாங்கி உயர;ந்த மீபொருண்மையில் கட்டமையும் இக்கவிதைகள் செய்நேர;த்தி கொண்டு கலைத்திறனாக்கும் கலையாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.
  நவீன கவிதை வரலாற்றில் 1970கள் விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டிய காலகட்டமாகும். இக்காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் இலக்கிய விழிப்புணா;வும் தென்னிந்தியப் புதுக்கவிதையின் செல்வாக்கும் நூற்றுக்கணக்கான இளைஞா;களைக் கவிதை எழுத வைத்தது. எண்ணங்களையும் உணா;வுகளையும் இலகுவாக வெளியிடுவதற்கான சாதனமாகப் புதுக்கவிதை இருந்தமையால் இக்காலப்பகுதியில் ஏராளமான புதுக்கவிதை பிரசுரங்கள் வெளிவந்தன ஆயினும் இவற்றில் கலைப்பெறுமானம் கொண்ட கவித்துவமான படைப்புக்கள் மிகச் சொற்ப அளவிலேயே வெளிவந்தன உணா;வுகளை மையப்படுத்தி எழுந்த இக்கவிதைகள் சமூகப் பிரக்ஞை கொண்ட காத்திரமான கவிதைகளாகக் காணப்பட்டன. 1960களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அன்பு முகைதீன், மருதூh;கனி, நுஃமான், எம்.எச்.எம்.ஷம்ஸ் திக்குவல்லை கமால், அன்பு ஜவா;கா;ஷா, முதலான பலா; இக்காலப்பகுதியிலும் தொடா;ந்து இயங்கினா;. புதுக்கவிதை முனைப்பாகவும் வேகமாகவும் மலரத் தொடங்கிய இச்சூழலில் அன்புடீன், ஈழத்துநூன், அனல்அக்தா;, பாலமுனை பாரூக், ஜமாலி ஜவாத் மரைக்காh; (சோலைக் குமரன்), ஏ.கே.எம்.நியாஸ், எம்.பி இராஜ்தீன், ஜௌபா; மௌலானா போன்ற முஸ்லீங்கள் பலா; நவீன கவிதையின் உட்கூறுகளை உள்வாங்கி புதிய வீச்சுடன் இயங்கினா;.
‘கணையாளி’, ‘சிரித்திரன்’, ‘மல்லிகை’, ‘இதயம்’, ‘வீரகேசாp’, ‘பு+ரணை’, ‘அணு’, ‘கற்பகம்’, ‘தமிழமுது’,’;கவிதை’ முதலான இதழ்களுக்கூடாக அறியப்பட்ட திக்குவல்லைக்கமாலின் இருபத்தேழு கவிதைகளைத் தொகுத்து பதினாறு பக்கத்தில் ‘எலிக்கூடு’ என்னும் கவிதைத் தொகுப்பு 1973இல் வெளிவந்தது. யாதாh;த்த தன்மையற்று வாh;த்தையாலங்களுக் கூடாகக் கட்டுறும் இக்கவிதைகள் வானம்பாடித் தாக்கத்தால் உருவானவை.
         “ போh;கள்…… ஃ பஞ்சம்…… ஃ குடிசனப்பெருக்கம்…… .ஃ இந்நிலையில் ஃ தோழியின் கல்யாணத்துக்கு ஃ உடுப்பு…… ..ஃ புத்தகம்……பாவனைப் பொருட்கள்   இவற்றைப் பாpசளித்து என்ன பயன்? ஆதலால் கா;ப்பத்தடை மாத்திரைகளை பாpசளித்தேன்” அனுபவவெளிப்பாட்டுக்கு அப்பாற்பட்டு உணா;வின் தீவிரத்தன்மையிலிருந்து விலகி வரட்சியான அழகியல் தன்மைகளுடன் இணைந்த கவிதையாக இது விளங்குகின்றது. ஈழத்தில் முதலெழுந்த புதுக்கவிதைத் தொகுதி என்னும் வகையிலும் மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தி சமூகச் சீh;கேடுகளை களையுமுகமாக எழுதப்பட்ட தொகுதி என்பதாலும் சுவாமி ரத்னவன்ஸ தேரரால் முழுமையாக சிங்களத்தில் மொழிபெயா;க்கப்பட்ட தொகுப்பு ஆகையாலும் ஈழத்து கவிதை இலக்கியவளா;ச்சியில் முக்கிய தொகுப்பாகக் கொள்ளப்படுகிறது.
1973 இல் பலாலி ஆசிhpயா; கலாசாலையில் திக்குவல்லை கமாலின் நட்பினால் புதுக்கவிதை துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டஅன்பு ஜவஹர;ஷா ‘கதம்பம்’ என்னும் இலக்கியச் சஞ்சிகைக்கூடாக அறியப்பட்டவர;. பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய முஹமது ஜவஹர;ஷா 1974 இல் ‘பொறிகள்’ என்ற பெயரில் 44 பேரின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டாh;. ஈழத்தில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட புதுக்கவிதைகளின் தொகுப்பு முயற்சி இதுவாகும். மனித வாழ்வின் இருப்பியலை அதன் நிகழ்வுகள் முரண்பாடுகளுக்கூடாக பதிவு செய்த இப்புதுக்கவிதைக் தொகுப்பு புதுக்கவிதைக்குரிய புதிய தளங்களைத் திறந்து வைத்தது. 1975ஆம் ஆண்டு வெளிவந்த இவரது “காவிகளும் ஒட்டுண்ணிகளும்” என்ற தொகுதியில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை  வெளிப்படுத்திய அன்பு ஜஹகர;ஷா அப் பிரச்சினைகளுக்கான தீர;வினை முன்வைத்து இக்கவிதைகள் எழுதப்படவில்லை’ என்னும் கருத்து அ.யோகராசா முதலான சிலரால் முன்வைக்கப்பட்டது. வானம்பாடிக் கவிதைகள் போன்று வாய்ப்பந்தலுக் கூடாக இயங்கும் இவரின் பெரும்பான்மையான கவிதைகள் தன் கவித்துவத்தை இழந்து பிரக்ஞையற்று கோசங்களாகவே நிற்கின்றன.
“சேர;ந்தே வருகின்ற
துன்பத் துகள்கள்
வெடிக்கும் ஒரு நாளில்….
அதை இன்றைய தாக்க
“ஆட்” பேப்பரில்
செந்நிறத் தூரிகையால்
கத்தி அரிவாள்களை
ஆடம்பரமாய் போட்டோம்”
மாh;க்சிஸம் காலாவதியாகி விட்டதை வெற்றுவாh;த்தைக்களுக்கூடாகக் இக் கவிதையில் காட்சிப்படுத்துகிறாh;. அழகியல் வர;ணனைக்கு உதவும் வகையில் இல் நிறப்பெயர;கள் 103 இடங்களில் வானம்பாடிக் கவிதையில் பின்பற்றப்பட்டதை அறிய முடிகிறது.இதன் தொடா;ச்சியை இக் கவிதையிலும் காணலாம். இவர; பின்னாளில் தமிழ்வேந்தன், பிர;தவ்ஸி மாணிக்கராசன், வன்னிக்குமரன், துஷாட், திரையன்பன், ஞானஅநுஷா என்னும் புனைபெயருக்கூடாகவும் அறியப்பட்டாh;.
குறைவாகவே எழுதினாலும் நிறைவான கவிதைகளைத் தந்தவர;களில் ஒருவர; செந்தீரன். இஸ்லாமிய மக்களின் அடிமட்டப் பிரச்சனைகளை “விடிவு” என்னும் கவிதைத் தொகுப்பினூடாக வெளிக்கொணர;ந்த செந்தீரன் மொழி பெயர;ப்பாளராகவும் இயங்கியவர;. செந்தீரனைப் போன்று முஸ்லீம்களின் அவல வாழ்வியலைக் கவிதையாக வடித்தவர;களில் பிறிதொருவர; “ஈழத்துநூன்” எனப்படும் ‘நிலாம்’ ஆவாh;. முற்போக்குக் சிந்தனையாளரான இவரால் ‘நூன் கவிதைகள்’ என்னும் தொகுப்பும் கொண்டு வரப்பட்டது.
கவியரங்கு கவிஞராக அறியப்பட்ட அன்புடீன் மரபுக்கவிதைக்கூடாகவும் அறியப்பட்டவர;. ஓசை நயமிக்க இவரது கவிதைகளில் கருத்துக்களே மிஞ்சி நிற்கின்றன. மிகக் குறைந்தளவு கவிதைகளே இக்காலப்பகுதியில் இவரால் எழுதப்பட்டது. இவரைப் போன்று மரபுக்கவிதை, புதுக்கவிதைகளை எழுதியவராகப் பாலமுனை பாரூக் காணப்படுகிறாh;. இவர; பின்னாளில் குறும்பா முயற்சிகளிலும் ஈடுபட்டவர;.
சமய, சமூக, அரசியல், பொருளாதாரக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கவிதை படைத்தவர;களில் முக்கியமான ஒருவர; அன்புமுகைதீன் ஆவாh;. “நபிகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மாத்திரம் சொந்தக்காரா;” என்னும் பொருள் பொதியும் வண்ணம் நபிகள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பலவற்றைக் கவிதையாகப் படைத்தாh;. அவ்வகையில் “நபிகள் வாழ்வில் நடந்த கதைகள்” (1976), “அண்ணல் நபி பிறந்தாh;” (1979) என்னும் கவிதை நூல்கள் முக்கியமானவை. இயற்பியல் வாழ்வியலுக்கூடாக பெருமானாh; நபிகள்(ஸல்) வாழ்வில் நடந்த சம்பவங்களைக் கோவையாக இக்கவிதைகள் தொகுத்து தருகின்றன. வெண்பா, அறுசீர;, எண்சீர;, விருத்தம், ஆசிரியப்பா முதலான  மரபுவகை யாப்புக்களைக் கையாண்டு கவிதை பாடினாலும் தீரனின் கவிதைகள் யாவும் பாமரராலும் எளிதில் வாசித்தறியும் வண்ணம் எளிய மொழியில் உருவாக்கப்பட்ட கவிதைகள். ஏலவே தினகரன், தினபதி, வானொலி முதலானவற்றிலும் இக்கவிதைகள் வெளிவந்தனவே ஆகும்.
வடிவ, உள்ளடக்க ரீதியில் நவீன கவிதைக் கூறுகளை உள்வாங்கி 1970களில் தீவிர இலக்கியப் படைப்பாளியாகத் தன்னைப் பிரதிநிதித்துவப் படுத்தியவருள் ஒருவர; எம்.ஏ.நுஃமான் ஆவாh;. மாh;க்சிய சித்தாந்தத்துக்குட்பட்டு அரசியல் சமூகப்பிரச்சனைகள், வா;க்கமுரண்பாடுகள், சமூகஒடுக்கு முறைகள் முதலானவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு இவரெழுதிய கவிதைகள் “தாத்தாமாரும் பேரா;களும்” என்னும் தொகுப்பு 1977 இல் வெளிவந்தது. நிகழ்ச்சிக் கோவைகளின் வழி கருத்துக்களை முன்வைத்து காட்சி வைப்புகளினூடாக கருப்பொருளுக்கு உருக்கொடுக்கும் நுஃமானின் கவிதைகள் முருகையன் கூறுவது போல் ‘உயிர;ப்பும் அசைவும் கொண்டவை’.
மஹாகவி இறந்த போது புண்ணுண்ட மனதோடு நுஃமான் பாடிய சமரகவி பெருங்காயத்தின் தீராத வலியை ஆறாத்துயரோடு பகிர;கிறது.
வாழ்வு மலர; ஒன்றை
மரணம் பொசுக்கியது
வாழ்வின் மலர;
தன் மணத்தை வெளியெங்கும்
வீசி நிலைத்திருக்க விட்டு விட்டுச்
சாவென்னும்
தீயில் குளித்துத்
திடீரென் றழிந்தது காண்
ஆமாம்
மஹாகவி
என் அன்பா இறந்துவிட்டாய்
(நான் வளர;ந்த கருப்பை)
நிகழ்வாழ்வின் அர;த்தப் பொருண்மையாய் வாழ்ந்த மஹாகவியின் இறப்பு உணர;வு பு+ர;வமாய் இக்கவிதையில் பதிவு செய்யப்படுகிறது.
மஹாகவியைப் போல் நுஃமானைப் பாதித்த பிறிதொரு இழப்பு நீலாவணனுடையது. நீலாவணனுடன் தான் கொண்ட உன்னத உறவை, நட்பின் உயிர;மையால் விளங்கும் “நீலாவணன் நினைவாக” என்னும் கவிதை நுஃமானுக்கும் நீலாவணனுக்குமிடையிலான அன்பின் பரிவர;த்தனையை மிகத்துல்லியமாக எடுத்து உரைக்கிறது. “ஓ, என் கவிஞனே, ஃ நமது உறவின் பரிதியை மறைத்த ஃ கருமுகில் கும்பலைச் சிதறி அடிக்க ஃ நீ ஏன் உனது சூறாவளியினை ஃ அனுப்பவே இல்லை” என நீலவாணனை நோக்கி வினாத் தொடுக்கும் நுஃமான் ஈற்றில் தீராத தன் நெடுந்துக்கத்தை
           “எனது துயரையும் பெருமூச்சினையும்
            உனது நினைவின் சமாதியின் மீது
           சமர;ப்பணம் செய்கிறேன்
           சாந்தி கொள் அன்பனே”
என்னும் வரிகளுக்கூடாக உயிரோட்டமாய்க் காட்சிப் படுத்துகிறாh;. கூர;மையான மொழிக்கூடாக அர;த்தத்தைப் பிரவகிக்கும் கவிதையாக நுஃமான் கவிதைகள் காணப்படுகிறது.
நடப்பியல் வாழ்வை அரசியல் பின்னனிகளோடு இணைத்துக் கவிதை படைத்தவர;களில் முக்கியமானவாருள் மூதூர; முகைதீனும் ஒருவராவாh;. மரபுக்கவிதைகளோடு கவிஞனாக பிரவேசித்த முகைதீன் ‘சிரித்திரன்’ ‘மல்லிகை’க்கூடாக புதுக்கவிஞராக அறியப்பட்டாh;. ஆரம்பகால ஈழத்து புதுக்கவிதைகளில் தாக்கம் செலுத்திய வானம்பாடிக்கவிதைகளின்  சாயலை மூதூர; முகைதீன் கவிதைகளிலும் காணலாம்.
             இழுத்து உழைத்து
             இருமல் வந்ததினால்
             சேர;ந்திருந்த சில்லறைக்கு
             இருபத்தைந்து சத
             முத்திரை ஒட்டி
             சும்மா
             மருந்து வாங்கச் செல்ல
             டாக்டர; எழுதுகிறாh;
             இருபத்தைந்து ரூபா
             விட்டமின்
                          (சிரித்திரன் ஆகஸ்ட் 73)
“இலவசம்” என்னும் தலைப்பில் எழுதப்பட்ட இக்கவிதை வானம்பாடிக் கவிதைகளைப் போல்  இன்றைய சமூக அவலங்களை நகைச்சுவை உணர;வோடு வெளிப்படுத்துகிறது.
ஈழத்துத்தமிழிலக்கியத்தில் கொழும்பைத் தளமாகக் கொண்டு அழகியல் படிமங்களுக்கூடாகக் கவிதை பாடிய ஒருவராக அறியப்பட்டவர; மேமன் கவி ஆவாh;. 1976 இல் யுகராகங்கள் தொகுப்புக்கூடாக அறியப்பட்ட இவர; இந்திய (குஜராத்) மண்ணிலிருந்டது ஈழத்துக்கு குடிபெயந்தவர; ரஸாக்லாகானா என்னும் இயற்பெயர; கொண்ட இவர; சமூக ஏற்றத்தாழ்வுகள், வர;க்கச் சுரண்டல்கள், பொருளாதார சமவீனங்கள் முதலானவற்றைப் பாடு பொருளாகக் கொண்டு கவிதை பாடியவா;. புதுக்கவிதைக்கான முதலாவது சாஹித்ய மண்டலப்பரிசினைப் பெற்ற முஸ்லிம் கவிஞரும் இவராவார;. பேராசிரியர; கா.சிவத்தம்பி அவர;கள் கூறுவதைப்போன்று “இவருடைய மிக அந்தரங்கமான உள்ளத்தின் குமுறல்கள், போராட்டங்கள், கொந்தளிப்புக்கள் ஆள்நிலைப்பட்ட, தனிப்பட்ட மனப்போராட்டங்கள் எல்லாம் இவர; கவிதையினூடு வெளிவரவில்லை” என்பது வெளிப்படை.
சமூக நோக்கில் மிக்க நேர;த்தியான கவிதைகளுக்கு வித்திட்ட 1970கள் முற்போக்கு சிந்தாந்தங்களையும் ஆன்மீக நோக்கங்களையும் உள்வாங்கிக் கொண்டன. மரபுக்கும் புதுக்கவிதைக்கும் பாலமாக அமையும் இக்காலகட்டம் நவீன முன்னோடிக் கவிஞர;களின் ஆக்க இலக்கிய முயற்சியால் தலை நிமிர;ந்து நிற்கிறது. 1970களுக்கு பின் ஈழத்துக்கவிதை மரபிலிருந்து விலகி நவீன கவிதையான புதுக்கவிதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.



உடையும் முகக் கண்ணாடி

0 comments


மனித முகத்திரைகள் கிழிக்கப்பட்ட
 கனவு வெளிக்குள்
உறவின் இழைகள் அற
எவ்வித பிரக்ஞையுமற்று
வதை சூழ் ஆழியாய்
வாழ்க்கை வியாபித்தது

விகற்பங்கள் முகமாய்
சமைக்கும் மனிதா; மத்தியில்
எல்லைக் கோடுகளுக்குள்
என் உயிh;ப்பின் இழை அற
புனிதா;களின்
வீணில் படிந்த எச்சில் வாh;த்தைகள்
என்னைக் கழுவிச் செல்கின்றன.

உதிரும் என் எச்சங்களை
ஒவ்வொன்றாய் பொறுக்கியெடுத்து
எனக்குள் உயிரூட்டிக் கொள்கிறேன்
நாளைய சிறுபொழுதொன்றிலாவது
ஒரு கணமேனும்
நான் வானவில்லாய்
தோன்றி மறைவதற்கு
 

Copyright © 2010 • அகமுகம் • Design by Dzignine